Sunday, December 26, 2010

மூன்று சல்லடைகள்

"அய்யா,"என்று அழைக்கும் குரல் கேட்டது.தத்துவ ஞானி சாக்ரட்டீஸ் தலை நிமிர்ந்தார்."ஒரு செய்தி சொல்ல வந்தேன்,"என்று எதையோ சொல்ல முயன்றான் வந்தவன்.
"அவசரப்படாதே,நண்பனே!அந்தச் செய்தியை மூன்று சல்லடைகளில் சலித்துப் பார்த்தாயா?"
அவனுக்குப் புரியவில்லை."மூன்று சல்லடைகளா?"
"முதல் சல்லடை உண்மை அல்லாததைத் தடுத்து விடும்.நீ சொல்ல வந்த செய்தி உண்மையானதுதானா?"
'அது எனக்குத் தெரியாது.மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.அவ்வளவுதான்'
"இரண்டாவது சல்லடை கெட்டசெய்திகளைத் தடுத்து விடும்.நீ சொல்ல வந்தது நல்ல செய்தியா?"
'இல்லை அய்யா,'
"மூன்றாவது சல்லடை மற்றவர்களுக்குத் துன்பம் தரும் செய்திகளைத் தடுத்து விடும்.நீ சொல்ல வந்தது மற்றவர்களுக்கு நன்மை தரக் கூடிய செய்தியா?"
'இல்லை'
"நீ என்னிடம் சொல்ல வந்த செய்தி உண்மையானது அல்ல;நல்ல செய்தியும் அல்ல;அதனால் யாருக்கும் நன்மையோ மகிழ்ச்சியோ ஏற்படப்போவதில்லை.
அப்படித்தானே?"
'ஆமாம்'
"அருமை நண்பனே!அப்படிப்பட்ட செய்தியைப் பற்றி நாம் பேசி ஏன்நமது நேரத்தையும் உழைப்பையும் வீணாக்க வேண்டும்?"
வந்தவன் வாயை மூடிக் கொண்டான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment