Sunday, December 26, 2010

கோபத்துக்கு உகந்தது

எனது கோபங்களுக்கு நிறைய நியாயங்கள் உண்டு.உலகில் எந்தக் கொடுமைக்குத்தான் நியாயமில்லை?அந்த நியாயங்கள் யாருக்கு வேண்டும்?
அன்பு செய்யவும்,சகித்துக் கொள்ளவும்,சாந்தத்தை வளர்த்துக் கொள்ளவும் உதவாத நியாயங்களால் என்ன பயன்?
என் உள்ளே கோபம் உருவாவது குறித்து எனக்குக் கவலை இல்லை.கோபம் என்ற உணர்வு இல்லாவிடில் நான் பேடியாகிவிடுவேன்.கோபமே கொள்ளாதிருக்க இந்த உலகம் அவ்வளவு யோக்கியமாக இல்லை.எனது கோபமே என்னிடம் உள்ள நல்ல குணம்.ஆனால் அதை சேமித்து வைக்காமல் விரயமாக்குவது தான் எனக்கு சம்மதமில்லை.நான் கோபமே கொள்ளாத அளவுக்கு மழுங்கிப் போவதில் எனக்கு விருப்பம் இல்லை.எனது கோபம் என்னையே வென்றுவிடுகிற அளவுக்கு நான் பலமில்லாதவன் ஆகி விடுவதுதான் எனக்கு வருத்தம் தருகிறது.
எனது கோபங்களுக்கான நியாயங்களை நான் மறுக்கப் போவதில்லை.என்னைக் கோபத்துக்கு ஆளாக்குகின்ற சூழ்நிலைகளிலிருந்தும் நான் தப்பித்துக் கொள்ளவும் போவதில்லை.கோபத்தின் பொது எனது நாவிலிருந்து வெளிப்படுகின்ற சொற்கள் பிறரைச் சுடுகின்ற வெம்மையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.அப்போது நான் பேசுகின்ற வார்த்தையெல்லாம் ஒரு பைத்தியக் காரனின் பிதற்றல் போல் தெரிகிறது.
எனவே கோபங்களை இனி நான் சேமித்து வைக்கப் போகின்றேன்.கோபம் வரும்போது நான் மவுனமாகி விடப்போகிறேன்.செயலற்று இருந்து விடப் போகிறேன்.கோபத்துக்கு உகந்தது மவுனமே.
--ஜெயகாந்தன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment