Sunday, December 26, 2010

சங்கடம்

ஆபிரஹாம் லிங்கன் ஜனாதிபதி பதவி ஏற்று முதல் உரையாற்றிய தினம்.அவர் ஒரு ஏழை செருப்புத் தைப்பவரின் மகன்.எனவே பணக்காரர்கள்,உயர் குலத்தோர் மிகவும் எரிச்சலடைந்தனர்;கோபப்பட்டனர்;ஆத்திரமுற்றனர்.அவர் பேச எழுந்த போதுஒரு பணக்காரர் எழுந்து நின்றார்.''மிஸ்டர் ஜனாதிபதி,பேசத்தொடங்குமுன் ஒன்றை நினைவூட்டுகறேன்.உங்கள் தந்தை என் குடும்பத்தினருக்கு செருப்புத் தைத்தவர்.ஜனாதிபதி ஆகி விட்டதால் பூரிப்பு அடையாதீர்கள்.நான் அணிந்த காலணிகளும் உங்கள் தந்தை தைத்தவையே.நீங்கள் ஒரு செருப்பு தைப்பவரின் மகன் என்பதை மறவாதீர்கள்.''
எங்கும் அமைதி நிலவியது.லிங்கன் மனம் வருந்துவார் என அனைவரும் எண்ணினர்.ஆனால் லிங்கன் சங்கடப்படவில்லை.மாறாக,அவர் சபை முழுவதையும் சங்கடப்படுத்திவிட்டார்.அவர் கூறினார்,''நல்லது.என் தந்தையைப் பற்றி நினைவு படுத்தியதற்கு நன்றி.அவர் ஒரு அருமையான செருப்பு தைப்பவர்.நான் அவரளவு அருமையான ஜனாதிபதியில்லை.அவர் தைத்துத் தந்த காலணிகளை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்.அதில் ஏதேனும் கோளாறு இருப்பின் என் அப்பா இறந்துவிட்டாரே என வருந்தாமல் என்னிடம் கொண்டு வாருங்கள்.நான் ஒரு கத்துக் குட்டி தான்.ஆனால் நான் அவற்றைச் சரி செய்து தர முடியும்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment