Sunday, December 26, 2010

கண்ணாடி தரும் பாடம்

1நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கரையோ பட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது.அந்தக் கரையைக் கண்ணாடி கூட்டிக் காட்டுவதும் இல்லை;
குறைத்துக் காட்டுவதும் இல்லை.உள்ளது உள்ளபடி காட்டுகிறது.
அதே போல் உன் சகோதரனிடம்,நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ,அந்த அளவுக்குத்தான் சுட்டிக் காட்ட வேண்டும்.எதையும் மிகையாகவோ,ஜோடித்தோ,துரும்பைத் தூனாக்கவோ,மலையை கடுகாகவோ ஆக்கக்கூடாது.
2கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் அது உன் குறையைக் காட்டுகிறது.நீ அகன்று விட்டால் கண்ணாடி மவுனமாகிவிடும்.
அதேபோல்,மற்றவர்களின் குறைகளை அவர்களிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும்.அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது.
3ஒருவருடைய குறையைக் கண்ணாடி காட்டுவதால் அதன் மீது யாரும் கோபமோ எரிச்சலோ படுவதில்லை.
அதேபோல்,நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.
அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமானால் திருத்திக் கொள்ள வேண்டும்.
கருத்து: முகம்மது நபிகள்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment