Wednesday, November 24, 2010

கடவுள் நம்பிக்கை

ஒரு மனிதன் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்தபோது ,தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு வேரைப் பற்றிக் கொண்டான்.பிடி தளர்ந்தால் பாதாளம் போகும் அபாயம்!அவன் இது வரை கடவுளை நம்பியதில்லை.இப்போது கடவுளை நினைத்து ,''கடவுளே,உன்னை நான் முழுமையாக நம்புகிறேன்.நீ தான் காப்பாற்ற வேண்டும்,''என வேண்டினான்.அப்போது வானிலிருந்து ஒரு குரல்!
குரல்: நீ என்னை நம்ப மாட்டாய் .
மனிதன்: கடவுளே ,என்னைக் கை விட்டு விடாதே.நிச்சயம் நம்புகிறேன்.
குரல்:எனக்கு நம்பிக்கை இல்லை.
மனிதன்:கடவுளே,நீ தான் காப்பாற்ற வேண்டும்.
குரல்:சரி,உன்னைக் காப்பாற்றுகிறேன்.முதலில் நீ பிடித்திருக்கும் வேரை
விட்டு விடு.
மனிதன்:வேரை விட்டு விட்டால் கீழே விழுந்து இறந்து விடுவேனே?
அதன் பின் வானத்தில் குரல் எதுவும் கேட்க வில்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment