Wednesday, November 24, 2010

எல்லாம் ஒன்று

கிராமத்தில் ஒரு கிழவன் தன வீட்டு சுவர் மீது அமர்ந்திருந்தான்.சாலையில் போய் வருகிற வாகனங்களை பார்ப்பதே அவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. காரில் போய்க்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் இறங்கி கிழவனிடம் வந்தான். ''பெரியவரே,இந்த சுவற்றில் ஐந்து நிமிடம் கூட என்னால் உட்கார்ந்து இருக்க முடியாது. எங்காவது சுற்றிக்கொண்டே இருந்தால் தான் எனக்கு மகிழ்ச்சி.ஆனால்நீ எனக்கு நேர் மாறாக சுவரிலேயே உட்கார்ந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறாய். அது எப்படி?''என்று கேட்டான்.
கிழவன் சொன்னான்,''அப்பனே,ரெண்டுக்கும் ரொம்ப வித்தியாசமில்லை.நீ காருக்குள் இருந்தபடி சுவர்களையும் ,வேலிகளையும்பார்த்துக் கொண்டு போகிறாய்.நான் இங்கே உட்கார்ந்து கொண்டு போகிற வருகிற கார்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..எல்லாம் ஒன்று தான்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment