Wednesday, November 24, 2010

ஈடுபாடு

தஞ்சை பெரிய கோவில் கட்டும் பணிநடந்து கொண்டிருந்தது.மன்னன் இராஜ ராஜன் மாறு வேடத்தில் வந்து,அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தான்.
''அய்யா,என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?''என்று ஒருவனைக் கேட்டான்.
அவன் பதில் சொன்னான்,''நான் ஒரு சுவரை கட்டிக் கொண்டிருக்கின்றேன்.''
மன்னன் அதே கேள்வியை இன்னொருவரிடம் கேட்டான்.
அவன் சொன்னான்,''நான் ஒரு கோவிலின் மதில் சுவரைக் கட்டிக் கொண்டிருக்கின்றேன்.''
மூன்றாவது நபரிடம் அதே கேள்வியைக் கேட்டதற்கு அவன் சொன்னான்,''அய்யா,
வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் ஒரு மாபெரும் கோவிலைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.''இதைத்தான் நாம் ஈடுபாடு என்கிறோம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment