Saturday, March 26, 2011

குழந்தைகள் பார்வையை பாதுகாக்க :




படிக்கும் போதும் , டிவி பார்க்கும் போதும் நேராக உட்கார்ந்தே பார்க்க வேண்டும் , குப்புற படுத்தோ, மல்லாக்க படுத்தோ பார்க்க கூடாது .

டிவி , கணினி பார்க்கும் போது நேராக பார்க்க வேண்டும் , சாய்வான கோணத்தில் பார்க்க கூடாது .

படிக்கும் போதும் ,கணினி பார்க்கும் போது, டிவி பார்க்கும் போதும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அரை நொடி கண்களை மூடி ஓய்வு எடுக்கவேண்டும் .

சரியான அளவில் வெளிச்சம் இருக்க வேண்டும் , அதிகமான வெளிச்சத்தில் கண்களின் ரெட்டின பாதிப்படையும் , குறைவான வெளிச்சத்தில் கருவிழி தசைகள் சோர்வடையும் . பொதுவாக படிப்பதற்கு குழல் விளக்கை விட குண்டு பல்பு சிறந்தது என்று ஒரு ஆய்வு கூறுகிறது .

அதி காலையில் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் , ஏன் எனில் கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் . நள்ளிரவில் படிக்கும் போது கண் தசைகள் வலுவிழந்து போகும். ( early to bed, early to rise)

வாகனத்தில் போகும் போது படிப்பதை தவிர்க்க வேண்டும் . கண்களுக்கு அதிகபடியான அழுத்தத்தை தரும் . ( விமானத்தில் படிக்கலாம் )

***
நன்றி டாக்டர் ராஜ்மோகன்.

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment