Saturday, March 5, 2011

புண்ணாக்கு

ஒருவர் தன மாட்டைக் கூட்டிக் கொண்டு கால் நடை மருத்துவரிடம் வந்தார்.மருத்துவர் என்ன பிரச்சினை என்று கேட்க வந்தவர் சொன்னார்,''மாட்டிற்கு புண் இருப்பதால் சரியாகப் புண்ணாக்கு தின்ன மாட்டேன் என்கிறது.''மருத்துவர் கேட்டார்,''புண் எங்கே உள்ளது?'' மாட்டுக்காரர் சொன்னார்,''புண்ணாக்கில் உள்ளது.''மருத்துவருக்கு கோபம் வந்து விட்டது.''என்ன நக்கலா?''என்று கேட்டார்.உடனே அவர் பதறிப்போய்,''அய்யா,நான் உங்களிடம் கிண்டல் செய்வேனா?மாட்டுக்குப் புண் நாக்கில் உள்ளது.என்று தான் சொன்னேன்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment