Tuesday, March 8, 2011

உடைமை

நீங்கள் உண்மையில்,ஒருபோதும்
பொருட்களுக்கு உடைமையாளராக இருப்பதில்லை.
ஒரு சில காலத்திற்கு அவற்றை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.
உங்களால் அவற்றைக் கொடுக்க முடியவில்லை என்றால்
நீங்கள் அவற்றால் பிடிக்கப் பட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் எதைப் புதையல் என்று போற்றுகிறீர்களோ,
அது,உங்களது கையின் குழிவிற்குள் இருக்க வேண்டும்
தண்ணீரைப் பிடித்திருப்பதுபோல.
அதை இறுக்கமாகப் பிடித்தால்
அது சென்று விடுகிறது..
உங்களுக்காக அதை ஒதுக்கி வைத்தால்
அதை நீங்கள் அழுக்குஆக்குகிறீர்கள்
அதை சுதந்திரமாக விட்டு விடுங்கள்.
அது எப்போதும் உங்களுடையதாகவே இருக்கிறது.

நமது செல்வத்தினால் அல்ல
ஆனால் மகிழ்ச்சிக்கான நமது ஆற்றலினால் மட்டுமே
நாம் செல்வந்தராகவோ,ஏழையாகவோ இருக்கிறோம்.
செல்வத்திற்காக போராடி
மகிழ்ச்சிக்கான ஆற்றலைப் பெறாமலிருப்பது
தலை வழுக்கையானவர்
சீப்புகளை சேகரிக்கப் போராடுவதைப்போல இருக்கும்.
தவளையின் பிரார்த்தனை என்ற நூலிலிருந்து.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment