Tuesday, March 8, 2011

என்னுள் நீ

கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி:
வாலி வதை செய்யப்பட்டவுடன் அவன் மனைவி தாரை புலம்புகிறாள்:
''செருவார் தோள!நின்
சிந்தையேன் எனின்
மருவா வெஞ்சரம்
எனையும் எவ்வு மால்
ஒருவேன் உள் உனை
ஆகின உய்தியால்
இருவேம் உள் இரு
வேம் இருந்திலேம்.''
இப்பாடலின் பொருள்: உன் உள்ளத்தில் நான் இருக்கிறேன் என்றால் உன்னைக் கொன்ற பாணம் என்னையும் கொன்றிருக்க வேண்டும்.இப்போது,நான் மட்டும் இருக்கிறேன்.என்னுள் நீ இருக்கிறாய் என்றால் என்னைக் கொன்று தானே உன்னைக் கொன்றிருக்க வேண்டும்?நான் தான் உயிரோடு இருக்கிறேனே?அப்படியானால் நீயும் உயிரோடு இருக்க வேண்டும்.இல்லையே,நீ மாண்டு போய் விட்டாயே?
அப்டியானால் ஒருவரில் ஒருவர் மாறிப் புகுந்திருந்தோம் என்பது வெறும் வார்த்தை.
''இருவேம் உள் இருவேம் இருந்திலேம் ''என்பதில்,சோக பாவமும்,அழகு பாவமும் போட்டியிட்டு வெளிப்படுகின்றன.மரணத்திற்குக் கூட உயிர் ஊட்டி விட்டது கம்பனின் இலக்கியம்!.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment