Monday, November 22, 2010

யார் சிறுவன்?

இராமானுஜ மாமுனிவர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி .அவர் ஒரு முறை திருப்பதிக்குச் சென்ற போது,அவரது தாய் மாமா பெரிய திருமலைநம்பி என்பவர் திருமலையில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். இராமானுஜரை ,வைணவத்தலைவர்என்ற முறையில் வரவேற்க திருமலை நம்பி மலையிலிருந்து இறங்கி வந்தார். வயதில் பெரியவரும் ,தாய் மாமனுமான அவர் தன்னை வரவேற்க இறங்கி வந்ததைப் பார்த்து வருந்தி இராமானுஜர்,''இந்தச் சின்னவனை வரவேற்க இவ்வளவு பெரியவர் வரவேண்டுமா?யாரேனும் சிறு பையனை அனுப்பி இருந்தால் போதுமே?''என்றார்.திருமலைநம்பி சொன்னார் ''நானும் அப்படித்தான் நினைத்தேன்.மடத்தை விட்டு வெளியே வந்து நாலாபக்கமும் பார்த்தேன்.என்னை விட ச்சின்னப்பையன் யாரும் தென்படாததால் நானே வர வேண்டியதாயிற்று.''இது எல்லோரையும் தன்னை விடப் பெரியவராகக் கருதும் உயர் பண்பு அல்லவா?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment