Monday, November 22, 2010

மத வுணர்வு

மந்திரி ஒருவர் ஒரு கிராமத்திற்கு வந்தார். மூன்று மதத்தலைவர்கள் வந்திருந்தார்கள். ஒருவர் பெருமாள் கோவில் பூசாரி. ஒருவர் கிருஸ்தவ பாதிரியார். இன்னொருவர் பள்ளிவாசல் இமாம். மூவரும் அவரவர் கோவிலுக்கு வரச்சொல்லி மந்திரியை இழுத்தார்கள் .மந்திரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. யாருடன் சென்றாலும் அடுத்த இருவரின் பொல்லாப்பு வரும். அப்போது திடீரென அங்கு ஒரு புலி வந்து விட்டது. புலி வந்ததும் கூப்பிட வந்தவர்கள் ஓடி விட்டார்கள். கூட்டம் கலைந்துவிட்டது. மந்திரியும் அவர் கார் டிரைவரும் அவசரமாய் காரில் ஏறும்போது டிரைவரின் கை ஹாரனில் பட்டு ஹரன் சப்தத்தில் புலி பயந்து ஓடி விட்டது. மந்திரி மறுபடியும் இறங்கி வந்து எல்லோரும் வாருங்கள் என்று கூப்பிட யாரும் வரவில்லை. எல்லோரும் ஓடி ஒளிந்திருந்தார்கள். சரி,நாமாவது போய்ப் பார்ப்போம் என்று நினைத்து முதலில் சர்ச் கதவைத் திறந்தார். மெதுவாக பெருமாள் கோவில் பூசாரி உள்ளிருந்து வந்தார். பெருமாள் கோவிலைத்திரந்தால்பயந்து கொண்டே இமாம் வெளியே வந்தார்.
பள்ளிவாசலில் இருந்து பாதிரியார் வந்து கொண்டிருந்தார்.உயிர் பற்றிய
அச்சம் வந்தவுடன் எங்கே போய்விட்டது அந்த மத வுணர்வு?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment