Monday, November 22, 2010

உத்தரவாதம்

ஒருவன் ஒரு ஹோட்டல் நிர்வாகிக்கு ,தன்னுடன் தன நாயையும் தங்க அனுமதிப்பார்களா என்று விபரம் கேட்டு ஒரு கடிதம் எழுதினான். அவனுக்கு கீழ்க்கண்ட பதில் வந்தது.
''ஐயா,நான் இந்த ஹோட்டல் தொழிலில் முப்பது வருடங்களாக இருந்து வருகிறேன். ஆனால் விடிகாலையில் எந்த நாயும் ஒழுங்கற்ற முறையில் நடந்ததாக நான் இதுவரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததில்லை. எந்த நாயும் பொய்செக் கொடுக்க முயன்றதுமில்லை. எந்த நாயும் சிகரெட் பிடித்து படுக்கை விரிப்பை எரித்தது இல்லை. எந்த நாயும் பையில் ஹோட்டல் துண்டை மறைத்து வைத்துப் பார்க்கவில்லை.அகவே ,உங்கள் நாயை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம்.அந்த நாய் உங்களுடைய நேர்மைக்கு உத்தரவாதம் கொடுத்தால்நீங்கள் கூட வரலாம்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment