Saturday, April 16, 2011

மஞ்சள் காமலை ஒரு நோயல்ல!



சிறுநீர் மஞ்சலாக போக பல காரணங்கள் இருக்கு. அதிலே ஒண்ணுதான் மஞ்சள் காமாலை. சில வகையான மருந்துகளை சாப்பிட்டாலே சிறுநீர் மஞ்சளாகப் போகும்.

*

குறிப்பாக வயிற்றோட்டத்திற்குத் தருகின்ற ·ப்ளுரோ ஸோஸிடோன் மருந்து, அதிக உஷ்ணத்தாலும் சிறுநீர் மஞ்சளாகப் போகும். எனவே, ஒருவருக்கு சிறுநீர் மஞ்சளாகப் போனால் அவரை பரிசோதனை செய்ய வேண்டும்.

*

அத்துடன் அவரது சிறுநீரிலும், இரத்தத்திலும் சில அடிப்படை பரிசோதனைகள் செய்திடல் வேண்டும். இதன் மூலம் ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறியலாம். அதனை உறுதிபடுத்தலாம். பிறகு, எதனால் ஏற்பட்டது என்பதனையும் கண்டறிந்து. அதன் அடிப்படையில் சிகிச்சையினைத் தொடங்க முடியும்.

*

நமது நாட்டு மக்கள் மஞ்சள் காமாலையைப் பொறுத்த அளவில், இரண்டு பெரிய தவறுகளைச் செய்து விடுகிறார்கள், முதலாவது, மஞ்சள் காமாலை வந்து விட்டதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள். இதற்கு பரிசோதனை செய்யாமல் சோற்றைத் தேடிப் போய் விடுகிறார்கள்.

*

இரண்டாவது, மஞ்சள் காமாலைக்குச் சிகிச்சை செய்யும் முன், அது எந்த வகை மஞ்சள் காமாலை எதனால் அது வந்தது? என்று பார்ப்பது இல்லை.

நேரடியாகவே, சிகிச்சைக்குப் போய் விடுகிறார்கள்.

*

கீழாநெல்லி மருந்து, பச்சை இலை வைத்தியம் என்று போகும் இவர்கள், மஞ்சள் காமாலை என்றாலே அது ஒரு நோய் என்று கருதிவிடுகிறார்கள்.

*

அது ஒரு நோயல்ல, ஏதோ ஒரு நோயின் அறிகுறிதான்!

*

ஏனென்றால், எண்ணற்ற நோய்களின் காரணமாக ஒருவருக்கு மஞ்சள் காமாலைக் வரலாம்.


***
thanks Dr.முத்துச்செல்வகுமார் - சென்னை
***



"வாழ்க வளமுடன்"


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment