Sunday, March 27, 2011

40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:‏


ஆண்களும் சரி பெண்களும் சரி 40 வயதை தாண்டிய பின்பு உடலில் சில மாற்றங்கள் வரும். உடல் தளர ஆரம்பிக்கும். இந்த வயதில் சில டெஸ்டுகள் செய்து கொண்டால் பல நோய்களின் ஆரம்ப நிலையிலே தெரிந்து அதனை சரி செய்து பெரிய ஆபத்தில் இருந்து தப்பிக்கொள்ளலாம்.




பி.பி செக் அப்

பிஸிக்கல் எக்ஸமினேஷன் மூலமாக தைராய்டு டெஸ்ட், மார்பக புற்று நோய் கண்டறியலாம்.

பாப் ஸ்மியர் டெஸ்ட் மூலம் கர்ப்பப்பையில் தோன்றும் ஆரம்ப கால கேன்சர் அறிகுறிகளை கண்டுபிடிக்கலாம். இந்த நோய் அதிகமாக பெண்களுக்கு வருவதால் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை இந்த டெஸ்ட் செய்வது நலம்.

இரத்த டெஸ்ட் மூலம் இரும்பு சத்து குறைவு, தைராய்டு பிரச்சனை, டயாபடீஸ் இருக்கானு டெஸ்ட் செய்யலாம்.





யூரின் டெஸ்ட் டயபடீஸ், யூரினரி இன்பெக்க்ஷன்,சால்ட் இருக்கானு தெரிந்துக்கொள்ளலாம்.

மேஷன் டெஸ்ட் இந்த டெஸ்டின் மூலமாக "ப்ரோசைட்டிக்கில்" இன்பெக்க்ஷன் இருக்கானு தெரிந்துக்கொள்ளலாம். அதோடு மலத்துடன் இரத்தம் வெளியேறுவதையும் தெரிந்துக்கொள்ளலாம்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்

வயிற்றில் ஏதாவது பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த ஸ்கேன் செய்துக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு தேவையில்லை.

இசிஜி

இரத்த குழாய் அடைப்பு, ஹார்ட் அட்டாக் வரவாய்புகள் இந்த வயதில் அதிகம் அதனால் இந்த டெஸ்ட் செய்தால் இந்த நோய் வர வாய்ப்பு இருக்கானு தெரிந்து முன்னேச்சரிக்கையாக இருக்கலாம்.

கொலஸ்ட்ரால் பரிசோதனை

தவறான உணவு பழக்கங்களால் இந்த நோய் வர வாய்பிருக்கு. உடலில் தேவையில்லாத கொழுப்புகள் இருப்பது தெரிந்துவிடும். பிறகு நாம் டயட், எக்ஸர்சைஸ் மூலமாக சரி செய்துவிடலாம்.

மேலே சொன்ன டெஸ்டுகள் மூலம் நாம் ஓரளவு நம் உடலில் உள்ள நோய்களை கண்டுபிடித்து சுலபமாக குணப்படுத்திவிடலாம்.


***

நன்றி ஈகரை.

***
"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment