Sunday, May 22, 2011

ஜோக்ஸ்

இந்த வார பஞ்ச் :கண்ணா... பன்னிங்க தான் கூட்டமா எக்ஸாம் எழுத வரும். என்னிக்குமே சிங்கம் சிங்கிளாதான் அரியர் எழுத வரும். ச்சும்மா அதிருதுல்ல....



***






பாண்டு : மச்சான்.. சிகரெட் குடிச்சா கேன்ஸர் வரும்னு சொல்றாங்களே. உண்மையாடா?



ஜோன்ஸ் : தெரியலடா மாப்ளே... நான் குடிச்சா புகை தான் வருது.





***





ஜோன்ஸ் ஏ.டி.எம். மெஷினில் இருந்து பணம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது நண்பர் பாண்டு அவரது பின்னால் நின்று கொண்டு "ஹா... ஹா..ஹா. நான் உன்னுடைய பாஸ்வேர்டைப் பார்த்துவிட்டேன்" என்று கூற, அதிர்ந்துபோன ஜோன்ஸ், பாஸ்வேர்ட் என்னவென்று கேட்க, பாண்டு சொல்கிறார். "நான்கு ஸ்டார்ஸ் தானே". உடனே ரிலாக்ஸ் ஆன ஜோன்ஸ், "அப்பாடி... அது தப்பு. 2298 என்பதுதான் சரி.


* * * *



தபால்காரர் : என்னய்யா இது..பின்கோடு போடவேண்டிய இடத்தில் "சரோஜா சாமான் நிக்கோலா" அப்படின்னு எழுதியிருக்கே?



வெங்கட்பிரபு : ஹி..ஹி..சென்னை - 600028 தான் அப்படி எழுதி



இருக்கேன்.





*****



வாத்தியார் :

உனக்குப் பக்கத்துல ஒரு பையன் தூங்கிக்கிட்டு இருக்கான். அவனை எழுப்பிவிடு.



மாணவன் :

அட போங்க சார். தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது மட்டும் நானா?





*****



டைரக்டர் :



இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும்.



எனக்கு நீச்சல் தெரியாதே.டைரக்டர் : கவலைப்படாதீங்க சார்…குளத்துல தண்ணியே இருக்காது.







*****







நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பாத கணவன் மீது கோபத்தில் இருக்கிறாள் மனைவி. கணவன் தொலைபேசுகிறான்.கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்?




மனைவி :



(கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம்கணவன் : ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.




* * * * *


மனைவி : ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?




கணவன் :

ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா?




****





ராமு : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..


வேணு : அடடா..என்னே ஒரு நட்பு.ராமு : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.




****




நபர் : மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?



ஜோன்ஸ் :

டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு. நபர் : ??!!







****







மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?


ஆசிரியர் : 1 48766 மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.




*******





இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள். பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.




*******










கணவன் : இன்னிக்கி என்ன சமையல்மனைவி : (கடுப்பாக) ம்ம்ம், விஷம்கணவன் : சரி சரி, எனக்காக காத்திராமல் நீ சாப்பிட்டுடு தூங்கு







*******





முதலாளி: இவ்வள்வு வேகமா காரை ஓட்டாதேப்பா, எனக்கு பயமா இருக்கு.


டிரைவர்: பயப்படாதீர்கள், கார் வேகமாய்ப் போகும்போதெல்லாம்என்னைப் போலவே நீங்களும் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள்.




*******








ஒருவர் உங்கள் மேல் கல்லை வீசினால், நீங்கள் அவர்மேல் பூவை வீசுங்கள்ஆனால்,மறுபடியும் அவர்கள் கல்லை வீசினால், ஒரு பூந்தொட்டியை தூக்கி எறியுங்கள். என்ன வில்லத்தனம்?







*******




&& 1 : உங்கள் சொந்த ஊர் எது?




&& 2 : அந்த அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லங்க, சொந்த வீடுதான் இருக்கு.






*******







courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

1 comment:

  1. 1 : உங்கள் சொந்த ஊர் எது?



    2 : அந்த அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லங்க, சொந்த வீடுதான் இருக்கு.!))))))))))))))

    ReplyDelete