Saturday, November 13, 2010

ஹிஹி ஹி ஹி

1. டாக்டர் பரிட்சைன்னாலே கை கால் எல்லாம் உதறுது. ஒரு நடுக்கம் வருதே டாக்டர். கவலைப்படாதீங்க . . . நாம பா‌ஸ் ப‌ண்‌ணிடுவோ‌ம்னு ந‌ம்‌பி‌க்கையோட இரு‌ங்க.

சரியா போச்சு போங்க . . . நான் ‌ஸ்கூ‌ல் ‌பி‌ரி‌ன்‌‌‌ஸ்பா‌ல் டாக்டர்..
 
 
2. பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.
 
3. ஒன்றுமே தெரியாத student கிட்ட
question paper கொடுக்குறாங்க….

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட
answer paper கொடுக்குறாங்க…

என்ன கொடும சார் இது….?
 
4. பெண்:நீ மட்டும் எனக்கு கணவனாக வந்தாயானால் காஃபியில விஷத்தைக் கலந்து கொடுத்துருவேன்.
ஆண்:நீ மட்டும் எனக்கு மனைவியா வந்தாயானால் அந்த விஷம் கலந்தக் காஃபியை அப்படியேக் குடிச்சுடுவேன்.....
5. நண்பர் 1: ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க?

நண்பர் 2: என் மனைவியோட சண்டை.ஒரு மாதம் பேச மாட்டேன்னு சொல்லிட்டாள்.

நண்பர் 1: அதுக்கு ஏன் இவ்வளவு சோகம்?நல்ல விஷயம்தானே.


நண்பர் 2: அந்த ஒருமாதம் இன்றோடு முடிந்துவிட்டது அதனால்தான்....



--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment