Saturday, November 20, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.


1) புன்சிரிப்பை விட கண்ணீர் உண்மையானது....
ஏனெனில் எவர் முன்பும் சிரித்துவிட முடியும்!
ஆனால் உங்களுக்கு ஸ்பெசலானவரின் முன்பு மட்டுமே உங்களால் அழ முடியும்!!
2) 21-ம் நூற்றாண்டு LKG மாணவன்:
டீச்சர்! என்னப் பத்தி என்ன நினைக்குறீங்க?
டீச்சர்: வெரி ஸ்வீட் பாய்!
LKG மாணவன்: மச்சான்! சொன்னேன்ல.. அவ எனக்கு ரூட் விடுராட!!

3) என்னப் பாக்குறீங்க! ஜாக்கிசான் பொண்ணு எனக்கு அனுப்பிய லவ் லெட்டர்! நமக்கு ஜப்பான் வரைக்கும் ஆள் இருக்கு!
4) அப்பா தன் 5 வயது மகனிடம்: ஏன்டா அழற? நானும் உன்னோட பிரெண்ட் மாதிரிதான்... சொல்லு!
மகன்: அது ஒன்னும் இல்ல மச்சி! இன்னும் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கேட்டதுக்கு உன் ஆளு என்ன அடிச்சுட்டா!

5) ஏன் பொண்ணுங்க அழகா இருக்காங்க?
உண்மையாகவா அல்லது மேக்கப்பினாலா?
?
?
?
?
?
?
?
?
பையன்களுக்கு நல்ல இமேஜிநேசன்ஸ் இருப்பதால்!


6) கண்டக்டர்: பஸ்சுக்குள்ள வாப்பா! அதான் கடல் மாதிரி இடம் இருக்கே!
ஸ்டுடன்ட்: எனக்கு நீச்சல் தெரியாது! அதான் கரையிலேயே இருக்கேன்!
7) அய்யாச்சாமி: "I am going" ன்னா என்னடா அர்த்தம்?
நண்பன்: நான் போறேன்!
அய்யாச்சாமி: ஹே! ப்ளீஸ்.... மீனிங் சொல்லிட்டு போடா!
8) ப்ரொபசர்: படிக்குற பிள்ளைங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கினா போதும்!
ஸ்டுடன்ட்: அது எப்படி சார் முடியும்? ஒரு நாளைக்கு 5 மணி நேரம்தானே காலேஜ்!

9) அதிர்ச்சியான தகவல், எல்லா செய்தி சேனல்களையும் பாருங்க!
ஒரு இறந்த பெண்ணின் உடலை நிலவில் நாசா கண்டுப்பிடித்துருக்கிறது...
பல நூற்றாண்டுக்கு முந்தைய உடலாம் அது!
எல்லோரும் குழப்பத்தில் உள்ளனர்! அது யாராக இருக்கும்?
?
?
?
?
?
?
?
அது வேற யாரும் இல்ல! நிலாவில் வடை சுட்டுட்டு இருந்த பாட்டியின் உடலாம் அது!
எனக்கு ரொம்ப மூட் அவுட்!
வடை போச்சே!


10) ஒருத்தர் கோவிலுக்கு சென்று தன் செருப்பை கழட்டி விடும் இடத்தில் "செருப்பை திருட நினைக்க வேண்டாம் -- பாக்சிங் சாம்பியன் " என்று நோட்டீஸ் வைத்து விட்டு உள்ளே சென்றார்!
சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து தன் செருப்பை வைத்த இடத்தில் உள்ள பதில் நோட்டீசைப் பார்த்து
அதிர்ச்சி அடைந்தார். அது என்னவெனில் "என்னைப் பிடிக்க முயல வேண்டாம் -- அதெலடிக் சாம்பியன்".


11) பித்யானந்தாவின் வழக்கறிஞர் வண்டு முருகன்:  
நான் சுத்தி வளச்சு பேச விரும்பல! ..... பலா நிதி மாரனப் பார்த்து கேக்குறேன்! பன் டி.வீ  நடத்துறியாஇல்ல F டி.வீ  நடத்துறியா
என்னய்யா தப்பு பண்ணுனான் என் கட்சிக்காரன்? எதோ ஒரு ஆசையில
பஞ்சிதாவ ரூமுக்கு தள்ளிட்டுப் போயிருக்கான்!.... சரின்னு விட வேண்டியதுதானே!...
அத விட்டுட்டு கேமராவுல ஷூட் பண்ணி இருக்க!....
அத நீ மட்டும் போட்டுப் பாக்க வேண்டியதுதானே!.... அதான்யா உலக வழக்கம்!...
அத விட்டுட்டு ஊருக்கே போட்டு காட்டிருக்க நீ!.....
போட்டு காட்ட அது என்ன குடும்ப படமா?.........
நீதிபதி: மிஸ்டர் வண்டு முருகன்! கோர்ட்ல இப்படி ஆவேசப் படக் கூடாது!
வண்டு முருகன்: கடுப்பேத்துறாங்க மை லார்ட்!!
 /

/கலக்கல் தொடரும்.
/


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment