Tuesday, September 14, 2010

இப்போதே கண்ணீரை சேமித்து வைக்கிறேன்


ரோஜா முட்களை
தான் வைத்துகொண்டு
   இதழ்களை கொடுப்பதே காதல்

என் காதலை விட
  உன் மகிழ்ச்சியே
   எனக்கு முக்கியம்

இந்த ஜென்மம் மட்டுமல்ல
 இன்னும்  பல ஜென்மங்கள்
 என்னை காதலித்து
   ஏமாற்றினாலும் பரவா இல்லை

என் உயிரே
   என்னை ஏமாற்றும்
 உரிமையும் உன்னை தவிர
 வேறு யாருக்குடா உண்டு !!!

என்னை கயப்படுத்தியதாக
எண்னி காயப்பட்ட வேண்டாம்
என் உயிரே அதுவே எனக்கு
    வலியினை தரும்

என் மனம் கண்ணீரில்
  மிதந்தாலும் அது உன்னால்
என்று மகிழ்கிறதே
எந்தன்  மானம்கெட்ட மனது
.

இன்னொரு ஜென்மத்திலும்
என்னை காதலித்து ஏமாற்று
 என் தேவதையே !!!!!!!!!!!!!
   உனக்காக கண்ணிர்  விட
    இப்போதே கண்ணீரை
        சேமித்து வைக்கிறேன்


-
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment