Monday, May 24, 2010

தண்டனை

பிரெஞ்சுக்காரரான வால்டேர் ஒருமுறை நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்தில் தங்கி இருந்தார்.அப்போது இங்கிலாந்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான மனோநிலை மக்களிடம் இருந்தது.ஒரு நாள்  அவர்ஒரு தெரு ஓரமாய் நடந்து போய்க் கொண்டிருந்தார்.அப்போது ஆங்கிலேயர்கள் கூட்டமாய் அவ்வழியே வந்தனர்.வால்டேரைப் பார்த்தவுடன்,''அதோ,ஒரு பிரெஞ்சுக்காரன் போகிறான்.அவனைத் தூக்கிலிடுங்கள்,''என்று கத்திக் கொண்டே அவரை சூழ்ந்து கொண்டனர்.வால்டேர்  அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து அமைதியாகச் சொன்னார்,''இங்கிலாந்தின் பெருமக்களே!நான் பிரெஞ்சுக்காரன் என்பதால் என்னைக் கொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.ஒரு ஆங்கிலேயனாகப் பிறக்காமல் ஒரு பிரெஞ்சுக்காரனாகப் பிறந்ததே பெரிய தண்டனை என்று நான் எண்ணுகிறேன்.இந்தத் தண்டனை போதாதா?இதற்கு மேலும் ஒரு தண்டனை அவசியம் என்று நினைக்கிறீர்களா?''அவருடைய சமயோசிதமான பதிலைக் கேட்டுக் கூட்டம் ஆர்ப்பரித்தது.அவர் த்ங்குமிடத்திற்குப் பத்திரமாக அழைத்து சென்றார்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment