Saturday, May 22, 2010

பொன்மொழிகள்-8

ஒருவன் உயரும் போது உலகம் அவனைப் பார்க்கிறது.
வீழ்ச்சி அடையும் போது தான் அவன் உலகத்தைப் பார்க்கிறான்.
**********
வெற்றி தலைக்கும் ,தோல்வி இதயத்திற்கும்
செல்லாது பார்த்துக்கொள்.
**********
காலம் என்பது........
நம்பிக்கைகளின் தொட்டில்;
ஆசைகளின் கல்லறை;
முட்டாள்களுக்குக் கற்றுத் தரும் குரு.
புத்திசாலிகளுக்கு ஆலோசகன்.
**********
பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.
**********
இளமையாக இருக்கும் போது ரோஜா மலர்கள் மேல் படுத்தால்
முதுமையான காலத்தில் முட்கள் மேல் படுக்க நேரிடும்.
**********
செல்லாத காசுக்குள்ளும் செப்பு இருக்கும்;
ஆளைப் பார்த்து எடை போடக் கூடாது.
**********
பரவசத்தோடு பார்;எல்லாம் பரவசமாகும்!
எல்லாமே பார்க்கும் விதத்தில் ஒளிந்திருக்கிறது.
**********
பயம் எப்போதும் எலியைக் கூடப் புலியாகக் காட்டும்.
**********
மனிதனுடைய பெரிய பிரச்சினை அடுத்த மனிதன் தான்.
கூடவே இருந்தாலும் பிடிக்காது;இல்லாவிட்டாலும் பயம்.
**********
தன கோபத்துக்கு மரியாதை இல்லை என்று தெரிந்தால்
யாரும் கோபப் படுவதில்லை.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment