Saturday, December 25, 2010

உங்கள் சிந்தனைக்கு

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன்
என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என
நினைத்தால் வலிமை படைத்தவனாக நீ ஆகிவிடுவாய்.

·         அற்ப இதயமுடைய மனிதரிடமிருந்து எந்த ஒரு உருப்படியான
காரியத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆகையால் நீ கடலைக் கடக்க
விரும்பினால் இரும்பைப் போன்ற மனஉறுதி உன்னிடத்தில் இருக்க வேண்டும்.
மலைகளைத் துளைத்துச் செல்வதற்குப் போதுமான வலிமை உனக்கு இருந்தாக
வேண்டும்.

·         ஒரு முகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப்
பெறலாம். இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழியாகும்.

·         மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த
உறுதியான முடிவில் பிடிப்புடன் இருந்தால் பிறகு நிச்சயமாக மற்றவை
நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.

·         உலக வரலாறு என்பது தன்னம்பிக்கையுள்ள, சில மனிதரின் வரலாறே
ஆகும். உள்ளே மறைந்து இருக்கும் தெய்வத்தன்மையை வெளிக்கொணரும் ஆற்றல்
தன்னம்பிக்கைக்கு உண்டு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment