Wednesday, December 15, 2010

பிட்டு - 32

1. வாணி: உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா .. .. கேரட் அல்வா-னு அடிக்கடி சொல்லிட்டு வர்றியே ஏன் ?

ராணி: கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே
==========
2. இந்த ஞாபக சக்தி மாத்திரையைச் சாப்பிட்டா, எல்லாமே ஞாபகத்துக்கு வந்துடும்.

படிச்சது எல்லாமேவா .. .. ?

ஊஹூம் .. .. உடம்புல எந்தெந்த இடத்துல, எந்தெந்த பிட் வெச்சிருக்கோம்னு ஞபாகம் வரும்.
==========
3. இதோ பாரும்மா கனமான பொருளை எல்லாம் உன்னைத் தூக்கக்கூடாதுன்னு நான் சொன்னது வாஸ்தவம்தான், அதுக்காக, பாத்ரூம்ல வழுக்கி விழுந்த உன் மாமியாரைத்

தூக்காம இருந்தது கொஞ்சம் கூட நியாயமில்ல.
==========
4. என் மனைவி என்னை தெய்வமா மதிக்கிறாங்க.

அப்ப உங்களை மனுஷனாவே மதிக்கறதில்லைன்னு சொல்லுங்க
==========
5. என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க. ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?

இன்னிக்கதான் சார் அவரோட சம்பள நாள்.
==========
6. வீட்டுக்காரம்மா: நம்ம வீட்டு ஐயா எனக்கத் தெரியாமல் எதுவுமே செய்ய மாட்டார்டீ.

வேலைக்காரி: அப்ப என்னை சினிமாவுக்கு அழைச்சிட்டுப் போனதைக் கூட சொல்லிட்டாங்களா .. .. ?
==========
7. இன்னிக்கு அவருக்கு ஓசிப் பத்திரிகை கிடைக்கலையா ?

ஏன் ?

பத்திரிகை தர்மமே இல்லாமப் போச்சுன்னு புலம்பிக்கிட்டுப் போறாரே.. .
==========

இன்றைய மெகா ஜோக்:

8. இரண்டு காதுகளும் தீய்ந்துபோன நிலையில் முக்கல் முனகலோடு டாக்டரிடம் ஒடிவந்;தான் ஒருவன். "எப்படிப்பா இப்படி ஆச்சு ?" என்று வியப்போ் கேட்டார் டாக்டர்.

நான் சட்டையை அயர்ன் பண்ணிட்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து டெலிபோன் மணி அடிச்சது. போன் ரிஸீவரை எடுத்துக் காதுல வைக்கறதக்குப் பதிலா அயர்ன் பாக்ஸை

வெச்சுட்டேன். காது தீய்ஞ்சுபோயிட்டுது * என்றான் அவன்.

"சரி .. .. இன்னொரு காதும் எப்படித் தீய்ஞ்சது .. ?"

"அந்த ராஸ்கல் மறுபடியும் போன் பண்ணினான் டாக்டர்"

http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment