Tuesday, January 12, 2010

பேச்சுக்கலை

பிறர் மனம் புண்படாமல் பேசுவது ஒரு கலை.
நண்பரின் வீட்டிற்கு ஒருவர் சென்ற போதுஅவருக்கு ஒரு தட்டில் ஜிலேபி வைத்தார் நண்பரின் மனைவி.ஜிலேபியை இரண்டாக விண்ட போது அதில் நூல் போல் வந்தது.சிரமப்பட்டு அதை சாப்பிட்டு விட்டார்.நண்பர் கேட்டார்.''ஜிலேபி எப்படி இருந்தது?''இவர் சொன்னார்,'மிக நன்றாக இருந்தது.நான் தான் இரண்டு நாள் தாமதமாக வந்து விட்டேன்.'
நண்பர் மனைவியிடம் வாழைப்பழம் கொண்டு வந்து கொடுக்கச் சொல்ல அவரும் தட்டில் கொண்டு வந்து வைத்தார்.அது சற்றுக் காயாக இருந்தது.இதையும் சிரமப்பட்டு சாப்பிட்டார் வந்தவர்.நண்பர் கேட்டார்,''வாழைப்பழம் நன்றாக இருந்ததா?''வந்தவர் சொன்னார்,'நன்றாக இருந்தது.நான் தான் இரண்டு நாள் முன்னால் வந்து விட்டேன்.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment