Friday, November 27, 2009

பணிய வைக்க

எளிமையான ஒரு குரு.புரியக்கூடிய, இதயத்தை தொடக்கூடிய அளவு பேசுபவர்.
இன்னொரு குரு.கர்வம் கொண்டவர்.வாதாடுவதில் வல்லவர்.இவர் எளிமையானவரை பார்க்க வந்தார்.வந்தவர் மரியாதை கூடச் செலுத்தாமல் ,''என்னைப் பணிய வைக்க உம்மால் முடியுமா?''என்றார் அகங்காரத்தோடு.
''இங்கே வாருங்கள் ,என் பக்கம்.''என்றார் முதல்வர்.இவர் வந்தார்.
''கொஞ்சம் இடப்பக்கம் வாருங்கள்,''என்றார்.இவர் வந்தார்.
''இல்லை.இது சரிப்படாது.வலப் பக்கம் வந்து விட்டால் வாதம் தொடர வசதியாக இருக்கும்.''இவரும் வலப்பக்கம் மாறினார்.
''பார்த்தீர்களா?இப்போது நான் சொன்ன படியெல்லாம் கேட்டீர்கள் அல்லவா?இப்படித்தான் நான் பணிய வைப்பது.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment