Thursday, May 20, 2010

துறவறம்

ஒரு வயதான கணவனும் மனைவியும் துறவறம் செல்லத் தீர்மானித்து வீடு சொத்து எல்லாவற்றையும் விட்டு வெளியேறினர்.சிறிது தூரம் சென்ற போது பாதையில் ஒரு வைரக்கல் கீழே கிடப்பதை கணவர் பார்த்தார்.தன மனைவி அதைப் பார்த்தால் அவளுக்கு அதன் மீது ஆசை வந்து விடுமோ என்று பயந்து விரைந்து சென்று தன காலுக்கடியில் அதை மறைத்தார்.அவருடைய நடவடிக்கை மனைவிக்கு சந்தேகத்தைக் கொடுத்தது.என்ன விஷயம் என்று வலியுறுத்திக் கேட்டதால் கணவர் உண்மையைச் சொன்னார்.மனைவி சொன்னார்,''வாருங்கள்,வீட்டுக்குப் போகலாம்.இன்னும் உங்களுக்கு வைரக் கல்லுக்கும் சாதாக் கல்லுக்கும் வித்தியாசம் தெரிகிறது.எனவே உங்களுக்கு துறவறம் போகக் கூடிய பக்குவம் இன்னும் வரவில்லை என்பது தெளிவாகிறது.அந்தப் பக்குவத்தை அடைந்தபின் நாம் துறவறம் செல்வோம்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

லைலா மஜ்னு

லைலா மஜ்னு என்றாலே அழியாக் காதல் ஞாபகம் வரும்.உண்மையில்  மஜ்னு என்றால்  பைத்தியம் என்று பொருள்.அவனுடைய இயற்பெயர்  கயஸ் என்பதாகும்.லைலாவின் மீது கொண்டிருந்த காதல் பைத்தியத்தின் காரணமாக அவனை மஜ்னு என்று அழைத்தார்கள்.லைலா மஜ்னு வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் காதல் எல்லோராலும் பேசப்பட்டது.கிராமப்புறங்களில் அவர்கள் காதல் பற்றிப் பாடல்கள் கூடப் பாடி வந்தனர்.இவர்கள் காதலைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தப் பகுதியின் மன்னர், கயஸ்அந்த அளவுக்கு காதலித்த லைலா எப்படி இருப்பாள் என்று பார்க்க ஆசைப்பட்டார்.லைலாவைப் பார்த்த மன்னர் கயசை வரவழைத்து,''இந்தப்பெண் அப்படி ஒன்றும் அழகாகவோ குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவோ இல்லையே!நீ ஏன் அவள் பின் பைத்தியமாகத் திரிகிறாய்?உனக்கு இவளைவிட எல்லா வகையிலும் சிறந்த பெண்ணைப் பார்த்து உனக்கு நான் கல்யாணம் செய்து வைக்கிறேன்.''என்று சொன்னார்.கயஸ் சொன்னான்,''லைலாவின் அழகை கயஷின்கண் கொண்டு பார்த்தால் தான் தெரியும்.வேறு கண்களுக்கு அவளின் அழகும் பெருமையும் தெரியாது.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, May 19, 2010

அதிக விலை

பாலஸ்தீன நாட்டுக்கு ஒருவர் உல்லாசப் பயணம் சென்றார்.அங்கு ஒரு ஏரியில் படகுச் சவாரி நடந்து கொண்டிருந்தது.இந்த மனிதருக்கு படகுச்சவாரி செய்ய ஆசை.படகுச்சவாரி செல்ல எவ்வளவு பணம் தர வேண்டும் என்று ஒரு படகோட்டியிடம் கேட்டார்.இருபதுடாலர் என்று அவன் சொன்னான்.இந்த தொகை மிகவும் அதிகம் என்று வாதிட்டார்,பயணி.''அய்யா,இந்த ஏரி மிகவும் புகழ் பெற்றது என்பதை மறந்து விடாதீர்கள்.''என்றான் படகோட்டி.'நீ என்ன சொன்னாலும்நீ கேட்கும் பணம் அதிகம் தான்.'என்றார் பயணி.''ஏசுபிரான் இந்த ஏரியில் தான் நடந்து சென்றார்,தெரியுமா?''என்று கேட்டான் படகோட்டி.''.படகில் செல்ல இவ்வளவு அதிக தொகை கேட்டால்,நடந்து தான் சென்றிருப்பார்.இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லையே!''என்று ஒரு  போடு போட்டார் பயணி.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அழைப்பு

வயதான மனிதன் ஒருவன்,காலையிலிருந்து மாலை வரை கஷ்டப்பட்டு விறகு வெட்டி அதைக் கட்டித் தூக்க முயலும் போது,முடியவில்லை.நொந்து போய்,''இந்த நிலையிலும் நான் உயிரோடிருக்க வேண்டுமா?எமதர்மனே!இப்போதே என் உயிரைக் கொண்டு போகக் கூடாதா?எமதர்மா!எமதர்மா,''என்று கத்தினான்.உடனே அவன் முன் எமதர்மன் தோன்றி,'அப்பனே,என்னை நீ அழைத்த காரணம் என்ன?'என்று கேட்டான்.திடுக்கிட்ட வயதான அந்த விறகு வெட்டி,''ஒன்றுமில்லை,இந்த விறகுக் கட்டைத் தூக்கிவிட இங்கு யாரும் இல்லை.அதனால் தான் உன்னை அழைத்தேன்,''என்றாராம்.உயிர் என்றால் யாருக்கும் வெல்லக்கட்டி தானே!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, May 12, 2010

பொன் மொழிகள் -5

எல்லாம் வேடிக்கை தான்!நமக்கு நடக்காமல்
மற்றவர்களுக்கு நடக்கும் வரை.
*********
சொல்லில் இங்கிதம் என்பது திறமையாகப் பேசுவதை விடச் சிறந்தது.
*********
கடுமையான,கசப்பான சொற்கள் என்பது
பலவீனமான கொள்கையின் அறிகுறி.
*********
சுண்டெலி பூனையைப் பார்த்து சிரித்தால்
பக்கத்திலே அதற்கு ஒரு வளை இருக்கிறது என்று பொருள்.
*********
காசு வாங்காமல்,எதுவும் உனக்குக் கிடைத்தால்
அதற்கு உண்டான விலை இன்னமும்
வசூலிக்கப் படவில்லை என்பது தான் பொருள்.
********
குழந்தைகளை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் நம்மைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில்,நாம் குழந்தைகளாக இருந்திருக்கிறோம்.
ஆனால் அவர்கள் பெரியவர்களாக இருந்ததில்லை.
********
வாழ்க்கையில் பயம் இருக்கலாம்.ஆனால்
பயமே வாழ்க்கையாக இருக்கக் கூடாது.
********
படுக்கைக்கு செல்லும் முன் செருப்புக்களோடு உன்
மனக் கவலைகளையும் வீட்டுக்கு வெளியே ஏறி.
********
இளமையாக இருக்கிறீர்களே என்று உங்களை உங்கள் நண்பர்கள் பாராட்டினால்,உங்களுக்கு வயதாகிறது என்று அவர்கள் நினைப்பதாக அர்த்தம்.
********
''குற்றங்குறைகளைச் சொல்லுங்கள்,''என்றுகேட்பார்கள்
.ஆனால்
புகழ்ந்து பேசுவதைத்தான் விரும்புவார்கள்.
********
பணம் என்பது ஆறாவது அறிவு .
அது இல்லாவிடில் ஐந்தறிவும்வீண்தான்.
********
சமாதானம் என்பது இரண்டு சண்டைகளுக்கு இடையே
உள்ள இடைவெளி.
********
அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்ற எண்ணம் தான்
எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்.
********
வேலை மனிதனைக் கொல்வது இல்லை.
கவலை தான் கொல்லும்
********
பொறாமையை நீ துணைக்கு அழைத்தால் முதலில்
அது உன் எதிரியை நெஞ்சில் அடிக்கும்.
பின் உன்னையே வயிற்றில் அடிக்கும்.
********
நன்மையை செய்யுங்கள்.
யாருக்கென்று மட்டும் கேட்காதீர்கள்.
********
மனிதர்கள் மோசமானவர்கள்.அபாயம் நீங்கியவுடன்
அவர்கள் ஆண்டவனை உடனடியாக மறந்து விடுகிறார்கள்.
********
சிறிது காலமே வாழக் கூடிய
ஒரு கொடுங்கோல் ஆட்சி அழகு.
********
சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொது அழுபவன் தெம்பற்றவன்.
அழுகையிலிருந்து சந்தர்ப்பத்தை ஏற்படுத்துபவன் நெஞ்சுரமுள்ளவன்.
********
ஆனால் என்ற வெறுக்கத்தக்க சொல் வந்து விட்டால்
முன்னால் சொன்னது எல்லாம் வீணாகிவிடும்.அதைவிட
இல்லை என்று மறுப்பதோ,அவமானப்படுத்துவதோ மேல்.
********
சில சமயங்களில் நமக்கு பதிலாக நம் உணர்ச்சிகளே பேசுகின்றன;முடிவு செய்கின்றன.நாம் அருகில் நின்று பயந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net