Saturday, January 9, 2010

சத்து

''சத்து குறைந்து போச்சுன்னு டாக்டர் கிட்ட போனீங்களே,என்ன ஆச்சு?''
'இப்போ என் சொத்து குறைந்து போச்சு.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எச்சரிக்கை

மது பானக் கடையில் குடித்துக் கொண்டிருந்த ஒருவன் பாத் ரூம் செல்ல எழுந்த போது தனது விஸ்கியை யாரேனும் குடித்து விடக்கூடாது என்பதற்காக ஒரு துண்டு காகிதத்தில் ,''இதில் நான் எச்சில் துப்பியிருக்கிறேன்.''என்று எழுதி வைத்து விட்டுச் சென்றான்.சில நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்த போது அதே காகிதத்தில் வேறு ஒருவன் எழுதி வைத்திருந்தான்,''நானுந்தான்.''என்று.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Thursday, January 7, 2010

தலைச்சுமை

அவர் அதிகம் படித்தவர்.அடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகம்.ஏராளமான நூல் நிலையங்கள் ஏறி இறங்கியிருக்கிறார்.ஏராளமான புத்தகங்கள் படித்துள்ளார்.ஒரு நாள் நூலகத்திலிருந்து வரும் வழியில் அவருடைய செருப்பு அறுந்து விட்டது.வழியில் இருந்த செருப்புத் தைப்பவன் ஒருவனிடம் கொடுக்க,அவன் சரி செய்ய ஒரு நாள் ஆகும் என்றான்.ஒரு நாள் முழுவதும் செருப்பின்றி எவ்வாறு நடப்பது என்று அவர் கேட்க,செருப்புத் தைப்பவன் வேறொருவருடைய செருப்பை ஒரு நாளைக்குத் தருவதாகக் கூறினான்.''மற்றவர் செருப்பை என் காலில் அணிவது எப்படி?''என்றார் அவர் கோபத்துடன்.
செருப்புத்தைப்பவன் சொன்னான்,''மற்றவர்களுடைய கருத்துக்களை எல்லாம் உங்கள் தலையில் சுமந்து கொண்டிருக்கும் நீங்கள்,மற்றவர்களுடைய செருப்பை உங்கள் காலில் அணியக் கூடாதா?''
இவர் முதல் முறையாக சுயமாக சிந்திக்கத் தொடங்குகிறார்.அந்தத் தொழிலாளியைப் பார்க்கிறார்...ஒரு புத்தகத்தைப் பார்ப்பது போல் அவன் கைகள் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தன.அவன் வார்த்தைகள் இவர் நெஞ்சைத் தைத்துக் கொண்டிருந்தன.தலைச்சுமை மெல்ல தரைக்கு வர ஆரம்பித்தது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, January 6, 2010

கேலி

அவனை எல்லோரும் கேலி செய்தார்கள்.என்ன செயல் செய்தாலும் கேலிக்குள்ளாகி மனம் வருந்தினான்.ஒரு முனிவரை அணுகி இதற்கு வழிகேட்டான்.முனிவர் ஒரு எண்ணெய்நிரம்பிய கிண்ணத்தை அவன் கையில் கொடுத்து ஒரு சொட்டும் சிந்தாது ஊரைச் சுற்றி வரச் சொன்னார்.அவனும் சிரத்தையோடு அதைச் செய்தான்.அப்போதும் ஊரார் கேலி செய்தனர்.அவன் ஊர் சுற்றி வந்து எண்ணெய் கிண்ணத்தை முனிவரிடம் கொடுத்தான்."இன்று உன்னை யாரும் கேலி செய்ய வில்லையா?"என்று முனிவர் கேட்டார்.'கேலி செய்தார்கள்.ஆனால் எண்ணெய் சிந்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்ததால் அவர்கள் பேசியது என் காதில் விழவில்லை.'என்றான் அவன்.
"உன்னுடைய கவனம் எல்லாம் நீ செய்யும் செயலில் இருந்ததால் மற்றவர்கள் பேசியது உன் காதில் விழவில்லை.அத்துடன் செய்த காரியத்திலும் வெற்றி அடைந்திருக்கிறாய்.அப்படி இருக்கும் போதுநீ எதற்காக மற்றவர்கள் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து உன் காரியத்தை அரைகுறையாகச் செய்ய வேண்டும்?எனவே,பிறர் பேசுவதையெல்லாம் பொருட்படுத்தாது வாழ்க்கையில் முன்னேறத் தேவையான காரியங்களை முழு கவனத்தோடு செய்.அப்போது உன்னை யாரும் கேலி செய்ய மாட்டார்கள்."என்றார் முனிவர்.
அவன் தெளிவுடன் விடை பெற்றான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எப்போது படுப்பது?

"எங்கள் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டவுடன் படுத்துவிடுவோம். உங்கள் வீட்டில் எப்படி?"
'கையைக் கழுவி விட்டுத்தான் படுப்போம்.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net