Tuesday, October 19, 2010

கோபத்தை கையாள எளிய வழிகள்

1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.
2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.
3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்
4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
5. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
6. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.
7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.
8. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.
9. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.
10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.
11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.
12. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.
13. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.


http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை சரவெடி

'குரைக்கிற நாய் கடிக்காது' னு சொல்றியே எதை வெச்சு அப்படி சொல்றே?

என் வீட்டுகக்காரர் கோபம் வந்தா, சத்தம் போட்டுக்கிட்டு
அடிக்க வருவார்….கையையும் ஓங்கிடுவார்…ஆனா
அடிச்சதில்லை…அதான்!
===========================================================

ஆசிரியர்: What is the full form of maths?
மாணவன்: Mentally affected teachers harassing students..

ஆசிரியர்:காந்திஜீயின் கடின உழைப்பால் ஆகஸ்டு 15 நமக்கெல்லாம் என்ன கிடைத்தது?
மாணவன்:ஒரு நாள் லீவு கிடைத்தது..

ஆசிரியர்:சரி..எனக்கு இப்ப யாராவது இரண்டு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடப்பதற்கு ஒர் உதாரணம் சொல்லுங்கள் பார்ப்போம்???
மாணவன்:சார்..என் அப்பாவும்,அம்மாவும் ஒரே நாளில்,ஒரே நேரத்தில் தான் கல்யாணம் கட்டினார்கள்..

ஆசிரியர்:உன்னோட அப்பாட வயசென்ன???
மாணவன்:என்னோட வயசுதான் சார்..
ஆசிரியர்:எப்டீடா???
மாணவன்: நான் பிறந்தாப்பிறகு தானே அவர் அப்பா ஆகினாரு..அதான்..

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கூடாதா ?

உன் விரல் படும் காகிதமாக
பிறந்திருக்க கூடாதா ?

நின் மணிக்கைகளை உரசிக் கொண்டே
உயிர் வாழும் வளையலாக நானிருந்திருக்க கூடாதா?


நீ... உன் முகம் பார்த்து ஒப்பனை செய்யும்
கண்ணாடியாக உருவெடுத்திருக்க கூடாதா ?

அதிகாலை பொழுதில் வாசலில்
அலங்கரிக்கும் கோலத்தின் புள்ளியாக மாறியிருக்க கூடாதா?

நின் பனிகட்டி தேகத்தில் உருண்டு
விளையாடும் வியர்வைத்துளியாக அவதரித்திக்க கூடாதா ?

உன் செவிகளில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும்
கம்மலுக்கு திருகாணியாக ஒலிந்திருக்க கூடாதா ?

நின் விழிகளை சுற்றி தீட்டியிக்கும்
கண் மை யாக கரைந்திருக்க கூடாதா ?

மேக நெற்றியில் மெலிந்து மிதந்து கொண்டிருக்கும்
நிலவு பொட்டாக உருமாறியிருக்க கூடாதா ?

உன் கழுத்து வளைவுகளை கட்டிக் கொண்டிருக்கும்
பாசி மணியாக மாறியிருக்க கூடாதா ?

நீ எட்டு வைத்து நடக்கும் போதெல்லாம்
வாசம் வீசும் கொழுசு மணி மொட்டாக இருந்திருக்க கூடாதா ?


உன் உடல் தொட்டு தன்னை அழகுபடுத்தி கொள்ளும்
புடவையின் நூலாக புகுந்திருக்க கூடாதா ?

நின் இருதய அறையில் தங்கி செல்லும்
மூச்சுக் காற்றாக சில நிமிடம் மறைந்திருக்க கூடாதா ?

பாதைகள் எல்லாம் காத்திருக்கும்
உன் பாதங்களுக்கு நகமாக வளர்ந்திருக்க கூடாதா ?

என்ன செய்ய நான் மனிதனாக பிறந்து விட்டேன் என்பதற்காக
என்னை !
நீ...
ஒரு பொம்மையாக கூட வைத்திருக்க கூடாத ?

http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Monday, October 18, 2010

எமக்கு பிடித்த சிந்தனை

காலத்தின் அருமை

1 வருடம்           -           தோல்வியடைந்த‌ மாணவனுக்குத் தெரியும்.

1 மாதம்             -           குறை பிரசவத்தில் குழந்தை பெற்ற குணவதிக்குத் தெரியும்.

1 வாரம்             -           வாரப் பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும்.

1 நாள்               -           ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு 

                                     பெற்றவனைய் பார்த்து பதவி உயர்வு  பெறாதவனுக்குத் தெரியும்.

1 மணி              -           பரிட்சை எழுதும் மாணவனுக்குத் தெரியும்.

1 நிமிடம்           -           இரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால் தெரியும்.

1 வினாடி           -          ஓட்டப் பந்தயத்தில் ஒரு வினாடியில் தோற்றுப் போனவனுக்குத் தெரியும்.


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 29

1. உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க ?

பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சி
==========
2. ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க ?

பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.
==========
3. மேடையில மைக் டெஸ்ட் பண்ணியது தப்பாப் போச்சி.

ஏன் ?

ஒன் டூ த்ரீன்னு சொன்னதும் எல்லோரும் ஓடிட்டாங்க
==========
4. சர்தார்ஜியும் அவரது நண்பரும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார்கள். உயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற ஒரு ஆள் அங்கிருந்த குதிக்கப் பார்ப்பதாக ஒரு காட்சி, பரபரப்பான இந்தக் கட்டத்தில் இடைவேளை விடப்பட வெளியே வந்த நண்பர்கள் இந்த காட்சி பற்றியே விவாதித்தார்கள்.

பேச்சுவாக்கில் அந்த ஆள் கீழே குதிக்கப் போகிறான் கால் எலும்பு முறியப் போகுது என்று பந்தயமே கட்டினார் நண்பர். சர்தார்ஜியும் விடவில்லை பந்தயத்துக்கு நானும் தயார். அவன் கண்டிப்பாக கீழே குதிக்கமாட்டான் என்றார் நம்பிக்கையோடு பந்தயத்தில் தோற்பவர், வெல்பவருக்கு விருந்து தரவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு இருவரும் தியேட்டருக்குள் போனார்கள்.

சர்தார்ஜிதான் பாவம் அந்த ஆள் உச்சியிலிருந்து கீழே குதித்துவிட்டான்.

பந்தயத்தின்படி, வென்ற நண்பருக்கு விருந்து வைத்தார் சர்தார்ஜி. அப்போது நண்பர், "உங்களை நான் எமாத்திட்டதா என்னோட மனச்சாட்சி உறுத்துது. அந்த ஆள் கீழே குதிக்கப்போறது எனக்கு முன்னாடியே தெரியும். படத்தை நான் எற்கெனவே பார்த்துட்டேன் என்றார்.

"நானும்தான் படத்தைப் பார்த்திருந்தேன். ஆனால் அந்த முட்டாள் மறுபடியும் இப்படிக் கீழே குதிப்பான்னு துளிகூட நான் எதிர்பார்க்கலை" என்றார் சர்தார்ஜி வருத்தத்தோடு
==========
5. டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு பூச்சிகூட இல்லை.

வெரிகுட் நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க
==========
6. உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே ?

ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன்
==========
7. மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க

கணவன்: ஏன் .. .. ?

மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே
==========

இன்றைய மெகா ஜோக்:

8. என்ன சார்.. .. வண்டியில காஸ் பொருத்தினப்புறம் ஆபீஸ் போறது கஷ்டமா இருக்காதே

நீங்க வேற ... இப்ப ராத்திரி சமையலையும் கார்லேயே பண்ணி முடிச்சுடுங்கனு சொல்லிட்டா என் பொண்டாட்டி

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net