Saturday, June 5, 2010

பாவம்

ஒரு நாட்டில் ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டது.அதனால் பல நாட்கள் பட்டினி கிடந்த ஒரு முனிவர், ஒரு யானைப் பாகனைப் பார்த்து,''உண்ண ஏதாவது உணவு இருந்தால் கொடு,''என்று கேட்டார்.''நான் எச்சில் படுத்தியஉணவு தான் இருக்கிறது,''என்றான் பாகன்.''பரவாயில்லை,அதையே கொடு,''என்று சொல்லி வாங்கிச் சாப்பிட்டார் முனிவர்.''இந்தாருங்கள்,இந்தத் தண்ணீரைக் குடியுங்கள்,''என்றான் பாகன்.;;அது எச்சில்,நான் குடிக்க மாட்டேன்,''என்றார் முனிவர்.''உணவுக்கு இல்லாத எச்சில்,தண்ணீருக்கு மட்டும் எப்படி வந்தது?''என்று கேட்டான்,பாகன்.முனிவர் சொன்னார்,''வேறு எங்கும் உணவு கிடைக்கவில்லை.இதைச் சாப்பிடாவிட்டால் என் உயிர்போயிருக்கும்.ஆனால் தண்ணீர் எங்கும் கிடைக்கும்.''
ஒரு தடவை தவறு செய்து விட்டால் தொடர்ந்து தவறு செய்தால் என்ன என்று நாம் நினைப்பதால் தான் பாவங்கள் அதிகரிக்கின்றன.வேறு வழியின்றி,நிர்பந்தத்தால் தவறு செய்தால் அது பாவமில்லை.நிர்ப்பந்தம் இல்லாத போது,வேண்டுமென்று தவறு செய்வது தான் பாவம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இயல்பு

மனிதனின் இயல்பு;
முப்பது வயதில்  --முறுக்கு
நாற்பது வயதில் --நழுவல்
ஐம்பது வயதில்  --அசதி
அறுபது வயதில்--மறதி
எழுபது வயதில்  --ஏக்கம்
என்பது வயதில்  --தூக்கம்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கிளிப்பேச்சு

வீட்டின் வரவேற்பறை. உச்சியில் ஊஞ்சல் கட்டப்பட்டு ஒரு கிளி.அந்தக் கிளியின் ஒரு காலில் பச்சை நிற நூலும்,மறுகாலில் சிவப்பு நிற நூலும் கட்டப்பட்டுக் கீழே தரை வரை தொங்கிக் கொண்டிருந்தன.வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்ததும் வீட்டுக்காரர் பச்சை நூலை ஒரு சுண்டு சுண்டினார்.உடனே கிளி,''வாங்க!வாங்க!வணக்கம்!சௌக்கியமா?''என்றது. விருந்தாளி விடை பெற்றுச் செல்லும் போது வீட்டுக்காரர் சிவப்பு நூலை சுண்டினார்.உடனே கிளி,''போயிட்டு வாங்க!அடிக்கடி வாங்க!நன்றி,''என்றது.விருந்தாளி வியந்து கூவினார்,''என்ன ஆச்சரியம்!பச்சை நூலை இழுத்தால் கிளி வரவேற்றுப் பேசுகிறது!சிவப்பு நூலை இழுத்தால் விடை கொடுக்கிறது!இரண்டையும் சேர்த்து இழுத்தால் என்னாகும்?''கிளி அவசரமாகக் கத்தியது,''அறிவு கெட்ட முட்டாளே,கீழே விழுவேன் !''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Friday, June 4, 2010

மூவருக்கு இரு கால்

ஒரு கணவன் எதோ வருத்தத்தில் தன மனைவி மேல் கோபித்துக் கொண்டு அடித்துத் துரத்தி விட்டான்.முன் கோபத்தால் அப்படிச் செய்து விட்டாலும் பிறகு அவளைத் தேடிக் கொண்டு புறப்பட்டான்.வழியிலே ஒருவனைக் கண்டு,
''ஆற்றுக்குக்குப் பகையாய் இருக்கும் மரத்தின் கீழே இருந்து 
வேலியைப் படல் கட்டுகிறவனே!
மூவர் இரு காலால் நடக்கக் கண்டாயோ?''என்று கேட்டான்.
அதற்கு அவன் விடை சொல்கிறான்,
''அவள் செத்து மூன்று நாள் ஆச்சு;
அவளைக் கொன்றவன் செத்து 
ஆறு நாள் ஆச்சு;
அவளைச் சுட்டவன் செத்து 
ஆறு மாசம் ஆச்சு'' என்று சொன்னான்.
நெசவுகாரன் ஒருவன் தேற்றா மரத்தின் கீழ் பாவு போட்டிருந்தான்.அவனைப் பார்த்து தான் கணவன் கேட்கிறான்.'ஆற்றுக்குப் பகை' என்றது,கலங்கல் நீரைத் தெளியச் செய்யும் கொட்டையைத்  தரும் தேற்றா மரத்தை. மனிதர்,வேலியைப்போலச் சுற்றி உடுக்கும் ஆடையின் பொருட்டுப் பாவு ஓட்டுபவன் என்பதை,'வேலிக்குப் படல் கட்டுகிறவனே'என்று குறிப்பிட்டான்.தன மனைவி இடுப்பில் ஒரு குழந்தையையும்,வயிற்றில் ஒரு குழந்தையையும் சுமந்து சென்றாள் என்பதை,'மூவர் இரு காலால் நடக்கக் கண்டாயோ'என்று கேட்கிறான்.
அவள் இடையில் ஓரிடத்தில்  தண்ணீர் குடித்த போது, அந்தத் தண்ணீரில் ஆறு நாளாகச் செத்துக் கிடந்த சிறு பாம்பின் விஷத்தால் இறந்தாள்.ஊரார்,ஆறு மாதத்துக்கு முன் வெட்டி உலர்த்தின மரத்தின் விறகைக் கொண்டு அவளைத் தர்மத்திற்கு எரித்து விட்டார்கள்.இதையே அந்த நெசவுகாரன்,அவள் செத்து மூன்று நாள் ஆச்சு.அவளைக் கொன்றவன்  (பாம்பு )செத்து ஆறு நாள் ஆச்சு.அவளைச் சுட்டவன் (மரம்) செத்துஆறு மாசம் ஆச்சு''என்று குறிப்பிடுகிறான்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Thursday, June 3, 2010

கடவுள் அருள்

மழையில் ஒரு மதப் பெரியவர் ஓடி வருவதைக் கண்ட முல்லா,''பெரியவரே,கடவுள் மக்கள் மீது கொண்ட கருணையினால் பெய்விக்கும் மழையைக் கண்டு ஓடினால் அது கடவுளை அவமதிப்பதாகும்,''என்றார்.பெரியவரும் உடனே மழையில் நனைந்து சென்று மறு நாள் காய்ச்சலால் அவதிப்பட்டார்.பிறகு ஒரு நாள் மழையில் நனைந்து முல்லா ஓடி வருவதைக் கண்ட அப்பெரியவர்,''என்ன முல்லா,எனக்கு புத்திமதி கூறிவிட்டு நீ மட்டும் மழையைக் கண்டு ஓடி வருவது கடவுளை அவமதிப்பதாகாதா?''என்று கேட்டார்.அதற்கு முல்லா,''ஐயா,கடவுளின் அருள் தான் மழை.நான் நனைவதற்கு அஞ்சிஓடவில்லை.ஆனால்  கடவுள்  அருள்  பெற்ற மழையை மிதிக்கக் கூடாதே என்று தான் வேகமாக ஓடுகிறேன்.''என்றாரே பார்க்கலாம்!பெரியவர் வாயடைத்துப்போனார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net