Monday, January 11, 2010

பாவம்

''டாக்டர்,என் கணவர் தூக்கத்தில் சிரிக்கிறார்.''
'விடுங்கம்மா,பாவம்.தூக்கத்திலாவது சிரித்து விட்டுப் போகட்டும்.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பேச்சு

மனைவி (கணவனிடம்):ஏங்க....நீங்க இன்னிக்கு பேசப்போற கூட்டத்துக்கு நான் வரட்டுமா?
கணவன்:வீட்டிலேயே என் பேச்சைக் கேட்க மாட்டாயே...கூட்டத்தில வந்தா கேட்கப்போறே?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வித்தியாசம்

காட்டு வழியே சென்று கொண்டிருந்த வழிப் போக்கன் ஒருவன்,கறுப்பு வெள்ளை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்ததை கவனித்து அந்த ஆடுகளை மேய்ப்பவனிடம் கேட்டான்,''தம்பி,இந்த ஆடுகள் ஒரு நாளைக்கு எவ்வளவு புல் தின்னும்?''
ஆடு மேய்ப்பவன்:வெள்ளை ஆடுகளா,கறுப்பு ஆடுகளா?
வ.போ.;வெள்ளை ஆடுகள்
ஆ.மே; ஒரு கூடை புல் தின்னும்.
வ.போ.;அப்படியானால் கறுப்பு ஆடுகள் எவ்வளவு தின்னும்?
ஆ.மே.;அவையும் ஒரு கூடை புல் தின்னும்.
வ.போ.;ஒரு ஆடு எவ்வளவு கம்பளி தரும்?
ஆ.மே.;வெள்ளை ஆடுகளா,கறுப்பு ஆடுகளா?
வ.போ.;வெள்ளை ஆடுகள்.
ஆ.மே.;அவை வருஷம் ஒன்றுக்கு மூன்று கிலோ கம்பளி தரும்.
வ.போ.;அப்படியானால்,கறுப்பு ஆடுகள்....?
ஆ.மே.;அவையும் மூன்று கிலோ கம்பளி தரும்.
வ.போ.;(எரிச்சலுடன்)ஏன் இப்படி கறுப்பு ஆடுகளையும் வெள்ளை ஆடுகளையும் இனம் பிரித்துக் கூறுகிறாய்?
ஆ.மே.;ஏனெனில் வெள்ளை ஆடுகள் எங்கள் அப்பாவுக்குச் சொந்தமானவை.
வ.போ.;அப்படியானால் கறுப்பு ஆடுகள்....?
ஆ.மே.;அவையும் எங்க அப்பாவுக்குச் சொந்தமானவை தான்.
அதற்கு மேல் கேள்வி கேட்க வழிப்போக்கனுக்குப் பைத்தியமா பிடித்திருக்கு?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Sunday, January 10, 2010

வழுக்கை

''தென்னை மரத்துக்கும் மனிதனுக்கும் நேர் விரோதம்.எப்படி?''என்று திரு.கி.வா.ஜகன்னாதனிடம்நண்பர் வினவினார்.
''தென்னை மரத்தில் காய்க்கும் தேங்காயில் இளமையில் வழுக்கை இருக்கும்.மனிதனுக்கு முதுமையில் தான் வழுக்கை வரும்.''என்று அழகாகப் பதில் சொன்னார் கி.வா.ஜ.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முத்து எங்கே?

நதிக்கரையில் இருந்த ஞானியைப் பார்க்க பெரிய கூட்டம்.பெரிய பணக்காரர் ஒருவர் பொறுமையின்றிக் காத்திருந்து தன முறை வந்த போது,தான் பணக்காரன் என்பதை உணர்த்த இரண்டு விலை உயர்ந்த முத்துக்களைக் கொடுத்தார்.ஞானி அதை வாங்கிப் பார்த்து விட்டு அதில் ஒன்றை நதியில் நழுவ விட்டார்.முத்து நதியில் விழுந்து விட்டது.பணக்காரர் அதிர்ச்சியடைந்து முத்தைத் தேட ஆரம்பித்தார்.கிடைக்கவில்லை.ஞானியிடம் வந்தார்.''அந்த முத்து எங்கே விழுந்தது என்று காட்டுங்கள்.''என்று அவரிடம் கேட்டார்.ஞானி இன்னொரு முத்தையும் நதிக்குள் வீசி,''இந்த முத்து விழுந்த இடத்தில் தான் முதல் முத்தும் விழுந்தது.''என்று மிக அமைதியாகக் கூறி விட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net