Wednesday, February 23, 2011

நல்லுபதேசம்

நோபல் பரிசு பெற்ற ஒருவரை வரவேற்பதற்காக சிகாகோ ரயில் நிலையத்தில் ஏராளமான தலைவர்களும் அதிகாரிகளும் புகைப்படக் காரர்களும் குழுமியிருந்தனர்.ரயில் வந்து நின்றவுடன் விருது பெற்றவர் வண்டியிலிருந்து இறங்கினார்.அவரோடு கை குலுக்கவும் அவரைப் பாராட்டுவதாகக் காட்டிக் கொள்ளவும் பலர் போட்டியிட்டனர்.புகைப்பட விளக்குகள் மிளிர்ந்த வண்ணமாய் இருந்தன.எல்லோருடைய கவனமும் அவர் மீது இருக்க அவர் கவனம் மட்டும்,தன சுமைகளைத்  தூக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் பக்கம்இருந்தது.அவர் விரைந்து சென்று அந்த மூதாட்டியின்  சுமைகளைத் தூக்கி அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டுப்  பின்கூடியிருந்தவர்கள் அருகில் வந்து அவர்களுக்குத் தன நன்றியைத் தெரிவித்தார்.அவர்களை சிறிது காக்க வைக்க நேரிட்டதற்காக மன்னிப்பு கோரினார்.இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் சொன்னார்,''ஒரு நல்லுபதேசம் உயிருடன் நடந்து செல்வதை என் வாழ்வில் இப்போது தான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.''
அந்த நல்ல மனிதரின் பெயர் டாக்டர் ஆல்பர்ட் ஷ்வெய்த்சர்

No comments:

Post a Comment