எப்போதும் செய்தித் தாள்களுக்கு பேட்டி கொடுக்க விரும்பாத வினோபாஜி ஒரு முறை அனைவரின் வற்புறுத்தலுக்காக ஒத்துக் கொண்டார்.நிருபர்கள் முன் வினோபாஜி வந்தவுடன்,'தங்களுக்குப் பிடித்த மொழியில் நீங்கள் பேட்டி
அளிக்கலாம்' என அவர்கள் சொன்னார்கள்.உடனே வினோபாஜி,''எனக்குப் பிடித்த மொழி மௌனம் தான்,''என்று கூறி பேட்டியை முடித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment