Saturday, January 8, 2011

ஒரே பதில்

வள்ளல் ஒருவர் புலவரிடம் வரிசையாக நான்கு கேள்விகள் கேட்டார். புலவர் நான்கு கேள்விகளுக்கும் பதிலாக  ஒரே வரியில்,'திருவேங்கடநாதா,'என்றார்.
அதன் விளக்கம்:
புலவரே,உம்மிடம் இல்லாததென்ன?        ----திரு (செல்வம்)
உம்மிடம் இருப்பதென்ன?                              ----வெம் கடன்
உம சொற்பான்மை என்ன?                             ----நா (நாக்கு)
செய் தொழில்யாது?                                           ----தா(தா,தா என்று வள்ளல்களை 
                                                                                          கேட்பது)

No comments:

Post a Comment