உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Tuesday, March 8, 2011
புரிதல்
கடவுள் யார் என்பதை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கும் முன் நம்மை நாமே புரிந்து கொள்ள வேண்டும்.ஏனெனில் நம்மைப் பற்றித்தான் நமக்குக் குழப்பம்.நம் நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக நாம் கடவுளைப் புரிந்து கொள்கிறோம்.சில சமயங்களில் நம்பிக்கையை இழந்து விடுகிறோம்.நம்மிடம் நம்பிக்கை இருக்கும்போது கடவுளை நினைப்பதில்லை.மனிதன் தனக்கு வசதியான முறையில் கடவுளை எற்கிறானே தவிர அவர் இருக்கும் விதத்தில் அல்ல.எந்தக் கருத்து வசதியாக இருக்கிறதோ,அதை ஏற்று,அதை உடனுக்குடன் மாற்றிக் கொள்ளவும் செய்வான்.இது ஒரு விளையாட்டு.கடவுள் பெயரை சொல்லி நாமெல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்_நம்மை வைத்தே நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலேயே!
No comments:
Post a Comment