Tuesday, March 1, 2011

கர்வம்

மகனே,
நான் உன்னை எச்சரிக்கிறேன்.
நீ கர்வியாகி விட வேண்டாம்.
அது என்றைக்காவது உன்னைத் தலை கீழாகத் தள்ளிவிடும்.
அறிவுள்ள மனிதனுக்கு கர்வம் அழகன்று.
அறிவற்றவர்களேகர்வம் கொள்வார்கள்.
இயல்பிலே கர்வம் கொண்டவர் எவரோ,
அவர் தலையானது கற்பனைக்கும் அடங்காத
அளவு மீறிய கர்வத்தால் நிரம்பி விடுகிறது..
கர்வமே துன்பத்தின் பிறப்பிடம்.
கர்வத்தைப் பற்றி அறிந்திருந்தும் நீ ஏன் அதனை
துரத்திக் கொண்டு செல்ல வேண்டும்?

No comments:

Post a Comment