Monday, February 28, 2011

விடுகதை

ஔவையாரை அவமதிக்க நினைத்த கம்பர்,அவரிடம் ஒரு விடுகதை போடும் சாக்கில்,'அடி' என்று அழைக்கிறார்.அது,'ஒரு காலில் நாலிலைப் பந்தலடி'என்பதாகும்.அதாவது,'நாலு இலைகளைப் பந்தலாகவும் ஒரு கம்பத்தை அடிக்காலாகவும் உடையது எது?'என்பது விடுகதை.
ஔவையார் என்ன சாதாரணமான புலவரா?அவர் அதற்கு பதில் சொல்லுமுகத்தான் கம்பரை,'அடா'என்று அழைக்க விரும்பினார்.
எட்டேகால் லட்சணமே எமன் ஏறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே-முட்டமேல்
கூரையில்ல வீடே,குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது?
அவலட்சணமே!எமன் ஏறி வருகின்ற எருமைக்கடாவே!மூதேவியே!கழுதையே!கூரையில்லாகுட்டிசுவரே!
குரங்கே!உன் விடுகதைக்கு பதில்,''ஆரைக்கீரையடா!''என்று கொட்டித் தீர்த்தார்.கம்பர் ஒரு முறை அடி என்று அவமதித்ததற்கு எத்தனை பெரிய அவமதிப்பு?எப்படியோ,அவ்விருவருக்கும் இடையில் இருந்த பிரச்சினை நமக்கு ஒரு நல்ல பாடலைக் கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment