ஒரு ஞானி ஒரு அரசனிடம் அகந்தை பற்றியும் எளிமை பற்றியும் விளக்கிச் சென்றார்..உடனே அரசன் அரச உடைகளை விட்டு சாதாரண உடை உடுத்தினான்.அரண்மனையைவிட்டு ஒரு குடிசையில் குடியிருந்தான்.சிறிது நாளில்,தன்னைப் போல் ஒரு எளிமையான அரசன் எங்கும் இருக்க மாட்டான் என எண்ணினான்.ஆனால் சிறிது யோசிக்கையில் இந்த எண்ணமே ஒரு அகந்தை தானே என்று நினைத்து ஞானியிடம் சென்று விளக்கம் கேட்டான்.ஞானி சொன்னார்,''நீ அரச உடையிலேயே இரு;அரண்மனையிலேயே வாழ்;ஆனால் மனதளவிலே எளிமையாக வாழ்ந்து வா.''
No comments:
Post a Comment