முல்லாவுக்கு அறிமுகமான ஒருவர்,ஒரு நல்ல செய்தியை அவரிடம் சொல்லி,நண்பராகிவிடலாம் என்று எண்ணி,அவர் வீட்டுக்கு சென்று அவரிடம் சொன்னார்,''என் பக்கத்து வீட்டுக்காரர்கள் இன்று கேக் செய்கிறார்கள்.''
உடனடியாக முல்லா,'அதனால் எனக்கு என்ன வந்தது?'என்று கேட்டார்.
வந்தவர்,''அவர்கள் அதில் கொஞ்சம் உங்களுக்குக் கொடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன்.''என்றார்.'அதனால் உனக்கு என்ன வந்தது?'என்று முல்லா கேட்க வந்தவர் அசடு வழிய நின்றார்.
No comments:
Post a Comment