Wednesday, January 5, 2011

சொர்க்கம்

வயதான கணவன்.சக்கரை நோய் மற்று பல விதமான நோய்கள் .எனவே மனைவி உணவில் கடும் கட்டுப்பாடு வைத்தாள்.வாய்க்கு இதமாக எதுவும் சாப்பிட முடியவில்லை.இரண்டு பேரும் இறந்ததும் சொர்க்கம்போனார்கள். சொர்க்கத்தில் வகை வகையான உணவு.கணவன் சாப்பிடத் தயங்கினான்.  கடவுள் சொன்னார்,''இங்கு என்ன சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது.சும்மா  சாப்பிடுங்கள்.''கணவன் மனைவியிடம் சீறினான்,'அடிப்பாவி கெடுத்தியே,  பூலோகத்தில் என்னை சாப்பிட விடாமல் கெடுத்தாயே?எல்லாம் சாப்பிட்டிருந்தால்,அங்கேயும் ருசியாக சாப்பிட்டு இருந்திருப்பேன்,இங்கேயும் ஐந்தாறு வருடம் முன்னாலேயே வந்து இந்த உணவைஎல்லாம் விரும்பியபடி சாப்பிட்டிருப்பேனே?''

No comments:

Post a Comment