முல்லா இறந்து விட்டார்.அவரது இரண்டு சீடர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.மூவரும் மறு உலகின் அழகிய வாயிலைத் தட்டினர்.''இது தான் நான் உங்களுக்கு வாக்களித்தது.நாம் சொர்க்கத்திற்கு வந்து விட்டோம்.''என்றார் முல்லா.
வழிகாட்டி .அவர்களை அழகிய அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.''இனி முடிவே இல்லாமல் இங்கே இருக்கப் போகிறீர்கள்.உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்.உடனே நிறைவேற்றுகிறேன்.''என்றான் வழிகாட்டி.
கேட்டதெல்லாம் உடனே கிடைத்தது.ஆசைப் பட்டதெல்லாம் நிறைவேறியது.
ஆனால் ஏழு நாட்களில் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது.கேட்பதற்கும் கிடைப்பதற்கும் இடைவெளி இல்லையென்றால் சலிப்புதான் ஏற்படும்.
வழிகாட்டியிடம் முல்லா,''நாங்கள் எங்கள் பூமியைப் பார்க்க விரும்புகிறோம்.கொஞ்சம் ஜன்னலைத் திறக்க முடியுமா?''என்று கேட்டார்.
'எதற்கு?'என்று கேட்டான் அவன்.
''எங்கள் ஆவலை மேலும் கிளறி விட.''என்றார் முல்லா.
அவன் கதவைத் திறந்தான்.கீழே பூமியில் மக்கள் போராடிக் கொண்டிருப்பது தெரிந்தது.இந்த முரண்பாட்டில் அவர்களது ஆர்வம் மேலும் கிளர்ந்தது.
அடுத்த ஏழு நாட்களில் அவர்களுக்கு மீண்டும் சலிப்பு ஏற்பட்டது.பூமியைப் பார்ப்பதில் இனி பயன் இல்லை.அதனால் முல்லா,''கொஞ்சம் நரக வாசலைத் திறந்து காண்பியப்பா,அதைப் பார்த்தால் எங்கள் ஆசைகள் புத்துணர்வு பெரும்.''என்றார்.
அதற்கு அவன் சிரித்தபடி சொன்னான்,''நீங்கள் எங்கே இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?இது தான் நரகம்.''
ஆம்,அவர்கள் இதுவரை இருந்தது நரகம்!
உங்களது எல்லா ஆசைகளும் நிறைவேறிவிடுவது தான் நரகம்!
No comments:
Post a Comment