உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Thursday, January 13, 2011
அதிக விலை
பாலஸ்தீன நாட்டுக்கு ஒருவர் உல்லாசப் பயணம் சென்றார்.அங்கு ஒரு ஏரியில் படகுச் சவாரி நடந்து கொண்டிருந்தது.இந்த மனிதருக்கு படகுச்சவாரி செய்ய ஆசை.படகுச்சவாரி செல்ல எவ்வளவு பணம் தர வேண்டும் என்று ஒரு படகோட்டியிடம் கேட்டார்.இருபதுடாலர் என்று அவன் சொன்னான்.இந்த தொகை மிகவும் அதிகம் என்று வாதிட்டார்,பயணி.''அய்யா,இந்த ஏரி மிகவும் புகழ் பெற்றது என்பதை மறந்து விடாதீர்கள்.''என்றான் படகோட்டி.'நீ என்ன சொன்னாலும்நீ கேட்கும் பணம் அதிகம் தான்.'என்றார் பயணி.''ஏசுபிரான் இந்த ஏரியில் தான் நடந்து சென்றார்,தெரியுமா?''என்று கேட்டான் படகோட்டி.''.படகில் செல்ல இவ்வளவு அதிக தொகை கேட்டால்,நடந்து தான் சென்றிருப்பார்.இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லையே!''என்று ஒரு போடு போட்டார் பயணி.
No comments:
Post a Comment