Thursday, January 13, 2011

பயனிலை

தமிழ் ஆசிரியர் திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தொடர்ந்து பாடம் கேட்ட சீடர் ஒருவர்,பலமுறை சொல்லிக் கொடுத்தும் பாடம் சரியாகக் கேட்காமல் ஒரு நாள்,''எழுவாய்,பயனிலை என்றால் என்ன?'' என்று கேட்டார். பிள்ளையவர்களுக்குக் கோபம் வந்து விட்டது.உடனே அவர்,''நீ இங்கிருந்து எழுவாய்!உன்னால் ஏதும் பயனிலை,''என்றதுமே சீடன் ஓடி விட்டான்.

No comments:

Post a Comment