Thursday, January 13, 2011

சம்மதம்

அந்தரே என்பவர் இலங்கைமன்னரின் அரசவை விகடகவி.அந்தரே ஒரு முறை மன்னரைப் பழி வாங்க எண்ணினார்.அரசருக்குச் சொந்தமான வயலில் நெல் அறுவடை ஆரம்பம் ஆகியது.வைக்கோலையும் நெல்லையும் பிரிக்க காளை மாடுகள் தேவைப்பட்டன.அந்தரேயைக் கூப்பிட்டுமன்னர்,''நூறு காளைகளுக்குச் சொல்லி விடு,''என்று சொல்லி விட்டார்.மறு நாள் காலை மன்னரும் மற்றவர்களும்  காளைகளுக்காகக் காத்திருந்தனர்.ஆனால் காளைகள் வரவில்லை.மன்னர் அந்தரேயைக் கூப்பிட்டு காரணம் கேட்க, அந்தரே ,''நானே நேரே போய்,காலையில்வந்து விட வேண்டும் என்று நூறு காளைகளிடம் சொல்லி விட்டு வந்தேன்.அவை கூட வருவதாகத் தலையையும் காதுகளையும் ஆட்டி சம்மதித்தன.ஆனால் ஏன் வரவில்லை எனத் தெரியவில்லை.''என்றாரே பார்க்கலாம்!

No comments:

Post a Comment