Wednesday, January 19, 2011

அவசரம்

ஒருவன் பத்தாவது மாடியிலிருந்த தனது அலுவலகத்தில் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது யாரோ பதட்டத்துடன்,'முருகா,உன் பெண்  விபத்தில் சிக்கி இறந்துவிட்டாள்,'என்று சப்தம் போட்டுச் சொன்னார்கள்.உடனே அவன்,'இனி வாழ்வதில் அர்த்தமில்லை,'என்று கூறிக் கொண்டே பத்தாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியே  கீழே குதித்துவிட்டான்.அவன் ஆறாவது மாடியைக் கடக்கும் போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது.''ஐயோ,எனக்குத்தான் பெண் குழந்தை கிடையாதே!''என்று கத்தினான்.நான்காவது மாடி அருகில் செல்லும் போது தான் அவன் உணர்ந்தான்,''அடடா,எனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே!''தரையில் சென்று விழும் தருணத்தில் தான் அவனுக்குப் புரிந்தது,''நான் என்ன செய்வேன்,என் பெயர் முருகன் இல்லையே!''

No comments:

Post a Comment