உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Monday, November 22, 2010
சமாதானம்
ஒரு குழந்தையை நடை வண்டியில் வைத்துத் தள்ளியபடி நடந்து கொண்டிருந்தான் ஒருவன்.குழந்தை பயங்கரமாக வீரிட்டு அழுதது.நடை வண்டியைத் தள்ளி வந்தவன் ''டேய்ஜான்,கோபப்படாதே,செல்லம் ....என் கண்ணல்ல,அமைதியாய் இருடா''என்று உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்தான்.அதைப் பார்த்த ஒரு பெண் அவனுடைய பொறுமையையும் அன்பையும் பாராட்டினார்.அப்புறம் குழந்தையிடம் திரும்பி ''ஜான்,ஏண்டாஅழுகிறாய்?''என்று கொஞ்சினாள்.அப்போது அவன் சொன்னான்,''அட!குழந்தையின் பெயர் ஜான் இல்லை.என்னுடைய பெயர் தான் ஜான்.நான் பொறுமையாய் இருக்க என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.''
No comments:
Post a Comment