Wednesday, November 24, 2010

இருக்கை

தன்னைப் பார்க்க வந்த ஒரு அறிஞரை ,ஒரு ஞானி உபசரித்து ஒரு ஆசனத்தில் அமரச் செய்தார்.அறிஞருக்கு ,தனக்கு அளிக்கப்பட்டஆசனம் ஞானி அமர்ந்திருந்த ஆசனத்தைவிட சற்றுக் குறைவாய் இருந்தது வருத்தத்தை ஏற்படுத்தியது.அவர் ஞானியிடம் ,''நீங்கள் என்னை அவமதித்து விட்டீர்கள்.நான் படித்த படிப்புக்கு இப்படித் தாழ்வான இருக்கையைத்தந்து கேவலப்படுத்தலாமா?''என்று கோபமாகக் கேட்டார்.ஞானி உடனே தன இருக்கையை அவருக்கு அளித்து விட்டுத்தான் கீழே அமர்ந்து அவருடன் பேசினார்.சிறிது நேரத்தில் அவர்கள் அமர்ந்திருந்த இடம் அருகே இருந்த ஒரு மரத்தின்மேல் ஒரு குருவி வந்து அமர்ந்தது.அதைக் கவனித்த ஞானி பேச்சு வாக்கில் ,''அறிஞரே ,அதோ உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருக்கும் குருவி தங்களை விட அதிகம் படித்திருக்குமோ?''என்று நாசூக்காக கேட்க அறிஞர் தன செயலுக்கு வெட்கப்பட்டு த்தலை குனிந்தார்.

No comments:

Post a Comment