Wednesday, November 24, 2010

சொல்லும் விதம்

ஒரு குருவிற்கு இரண்டு சீடர்கள் இருந்தார்கள்.ஒரு சீடன் குருவிடம் சென்று ,தியானம் செய்யும் போதுபுகை பிடிக்கலாமா என்று கேட்க ,குருவிற்கு கோபம் வந்து திட்டிவிட்டார்.
அன்று மாலை அடுத்த சீடன் சாவகாசமாகப் புகை பிடித்துக் கொண்டிருந்தான்.முதல் சீடன் அவனிடம் சென்று குரு அவனை மட்டும் புகை பிடிக்க எப்படி அனுமதித்தார் எனக் கேட்டான்.அதற்கு அவன் சொன்னான்.''நான் ,குருவிடம் ,புகைக்கும் போது தியானம் செய்யலாமா எனக் கேட்டேன்.ஆஹா,எவ்வளவு சிறந்த விஷயம் எனக் கூறி குரு அனுமதித்துவிட்டார்.''

No comments:

Post a Comment