உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Wednesday, July 14, 2010
செய்த தவறு
செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தால் கூடப் பிரச்சினை வருமா என்ன?விடிந்தும் விடியாத அரை இருளில் அரண்மனை நந்தவனத்தில் அரசர் உலாவிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கே வந்த அமைச்சர், மன்னரின் பின்புறத்தில் ஒரு தட்டு தட்டினார்.இருளில் கூர்ந்து கவனித்து,தட்டியது அமைச்சர் என்பதை அறிந்து கொண்ட மன்னர்,''என்னையே பின்னால் தட்டும் அளவிற்கு உமக்குத் தைரியம் வந்து விட்டதா?''என்று கேட்டார்.அமைச்சர் சொன்னார்,'மன்னிக்க வேண்டும்,மன்னரே,நான் இருளில் சரியாகக் கவனிக்கவில்லை.மகாராணி தான்உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து விட்டேன்.'அமைச்சரின் கதி என்ன ஆயிற்றோ!
No comments:
Post a Comment