உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Sunday, October 31, 2010
மேதைகள் விட்டுச் சென்றவை..
நீங்கள் ஏழையாக பிறந்தால் அது உங்கள் குற்றமல்ல.. ஆனால் ஏழையாகவே இறந்தால் அது உங்கள் குற்றம்தான் - பில்கேட்ஸ்
நீங்கள் எந்த பிரச்சினையையுமே சந்திக்காமல் அமைதியாக சென்று கொண்டிருந்தால், உங்கள் வாழ்க்கையில் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் - சுவாமி விவேகானந்தர்.
வெற்றி பெற மூன்று வழிகள்
ஒன்று.. மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு.. மற்றவர்களை அதிகமாக பணியாற்றுங்கள்
மூன்று... மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.
-வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர்
நீங்கள் வெற்றி பெற்றால் அதைப் பற்றி யாருக்கும் விளக்க வேண்டியது இல்லை. ஆனால் நீங்கள் தோலவி அடைந்தால், அதை பற்றி விளக்க அங்கே நீங்கள் இருக்கக் கூடாது. - அடல்ப் ஹிட்லர்
உங்களோடு நீங்கள் யாரையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அப்படி நீங்கள் செய்தால், உங்களையே நீங்கள் இழிவுபடுத்திக் கொள்வதாக அர்த்தமாகும். - அலென் ஸ்டிரைக்
நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால், நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?- அன்னை தெரசா
வெற்றி பெற்றால் மற்றவர்களை விட நீங்கள் சிறந்தவர் என்று அர்த்தமாகாது, ஒரு வேலையை மற்றவர்களை விட சிறப்பாக மற்றும் மற்றவர்களை விட விரைவாக செய்ததாக அர்த்தமாகும்.- போன்னி பிளேர்
எல்லோருமே உலகத்தை மாற்ற வேண்டும் என்றுதான் எண்ணுகிறார்களேத் தவிர, ஒருவரும் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை. - லியோ டோல்ஸ்டோய்
எல்லோரையும் நம்புவது பயங்கரமானது. ஆனால் யாரையுமே நம்பாமல் இருப்பது மிகவும் பயங்கரமானது - அப்ரகாம் லிங்கன்.
ஒருவர் தான் எப்போதுமே எந்தத் தவறும் செய்ததில்லை என்று கூறுவாரேயானால், அவர் எப்போதும் புதிய ஒன்றை முயற்சித்ததில்லை என்று அர்த்தமாகும். - ஐன்ஸ்டீன்
நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் 4 விஷயங்களை மட்டும் உடைத்துவிடாதீர்கள். அதாவது, நம்பிக்கை, சத்தியம், உறவு, இதயம். ஏனெனில், இதில் எதையாவது உடைத்தால் அதிகமாக சத்தம் கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும் - சார்லஸ்
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
சிறந்த பொன்மொழிகள்
உனக்கு ஒரே நண்பன் நீயே, ஒரே பகைவனும் நீயே, உன்னைத் தவிர பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை
இயற்கை தன் வழியிலேயே செல்லும், அடக்குதல் என்ன செய்யும்.
சன்மார்க்கத்தின் முடிவு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை.
தூக்கத்தை ஒழித்தால் ஆயுள் விருத்தியாகும்.
அவசரமாக தவறு செய்வதை விட தாமதமாக சரியாகச் செய்வதே மேல்
உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதை இழக்கும் வரை அதன் மதிப்பு தெரிவதில்லை.
மற்றவர்களின் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையாதவனால் நற்செயல்களை செய்ய இயலாது.
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.
மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வம் அடிக்கும்.
ஊசி முனையில் தவம் செய்தாலும் உன்னதுதான் கிட்டும்.
வியாதிக்கு மருந்து உண்டு, விதிக்கு மருந்த உண்டா
தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
நகைச்சுவை
"அவரும் சாப்பிட மாட்டார் சார்!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"நாலுவித மருந்து சாப்பிட்டும் வயித்து வலி நிக்கலை டாக்டர்..."
"அது என்னங்க நாலுவித மருந்து...?"
"போலி மருந்து, காலாவதியான மருந்து, கலப்பட மருந்து, நிஜ மருந்து"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"நம்ம தலைவர் அநியாயத்துக்கு பிரியாணி பிரியரா இருக்காரு..."
"எப்படி...?"
"மாற்றுக் கட்சிக்காரங்க வச்ச பிரியாணி விருந்துல, மாறுவேஷத்துல போய் சாப்பிட்டுட்டு வந்திருக்காரு!"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?"
"ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!"
"ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"அவர் பிரம்மாண்டமான பல் டாக்டர்..."
"அப்படியா...?"
"ஆமா... "பல் செட்"டுக்குக்கூட தோட்டாதரணியைக் கூப்பிடுவார்னா பார்த்துக்கோயேன்!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படித் தங்க முடியும்? கொஞ்சம் பெரிசா பாருங்களேன்!"
"யோவ், இது 'லிஃப்ட்'யா. ரூம் மாடியில இருக்கு!"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மனைவியை அடிக்கும் ஆண்களுக்கெல்லாம் என்ன தண்டனை தரலாம் மன்னா..?"
"தண்டனையாவது... உடனே அந்த வீரர்களை நம் படையில் சேர்த்துவிடுங்கள்!"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"சிஸ்டர் எனக்கு வயித்துல ஆபரேஷன் பண்ணியாச்சில்ல?"
"ஆமா"
"தையல் எல்லாம் ஒழுங்காப் போட்டாச்சா?"
"போட்டாச்சு."
"ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க.... என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பார்க்கணும்."
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"என்னது.... டாஸ்மாக் பார்ல பார்த்த பையன் நல்லவனா? அவனுக்கே நம்ம பொண்ணைக் கட்டி வைக்கணுமா?"
"ஆமாம்டி. நான் கேட்காமயே அவனுடைய சைட்டிஷ்ல பாதியை எனக்குக் கொடுத்தான்!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"தலைவரே... உங்களுக்கு கம்ப்யூட்டர் பத்தி சொல்லித்தர வந்தவரை ஏன் துரத்திட்டீங்க?"
"டி.வி. பொட்டியைக் காட்டி "மானிட்டர்"னு சொல்றான். "மானிட்டர்னா சரக்குன்னு கூட தெரியாத ஒருத்தன் கிட்ட நான்
கத்துக்கறதுக்கு என்னய்யா இருக்கு...?"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மாடசாமி கிட்ட நெருங்கிப் பழகி இருக்கக்கூடாது..."
"ஏன் ஏட்டய்யா அப்படிச் சொல்றீங்க?"
"அவனோட மாட்டை ஸ்டேஷனுக்குக் கூட்டிவந்து லாடம் கட்டச் சொல்றான்!"
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"இந்த மருந்தை வெறும் வயித்துலதான் சாப்பிடணும்..."
"பனியன்கூட போட்டிருக்கக்கூடாதா டாக்டர்...?"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"எனக்கு உடம்பு முடியலைன்னதும் முதல்ல மெடிக்கல் ஷாப் தான் போனேன் டாக்டர்..."
"அங்க ஏதாவது லூஸூத்தனமா ஐடியா கொடுத்திருப்பாங்களே...?"
"ஆமா! உங்களைப் போய் பார்க்கச் சொன்னாங்க!"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேனேஜர்: இந்த ஆபிஸூக்கு நான் மேனேஜரா? இல்லே நீ மேனேஜரா?
வேலையாள்: நீங்க கோபப்படற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலையே சார்?
மேனேஜர்: அட... அதில்லையா.. கொஞ்ச நாளா எனக்கு ஞாபக மறதியா இருக்கு. அதான் கேட்டேன்..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"கனவுல அடிக்கடி ஒரு உருவம் வந்து என்னைக் கொல்லுது..."
"யாரு... எமனா?"
"இல்லை.... தமன்னா!"
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
அறிஞர்
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
கிரிக்கெட்
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....